Sunday, November 18, 2012

திரு ஆர்.கே.லக்ஷ்மண் - நீங்களா இப்படி கடமை தவறீனீர்கள் ?



இன்று காலையில் அந்த செய்தியை  படிக்கும் போது
மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மனும் பால் தாக்கரேவும்
நெருங்கிய நண்பர்கள். ஒரே நேரத்தில் ஒரே பத்திரிக்கையில்
கார்ட்டூன் வரையத் தொடங்கியவர்கள் என்று.

இதுவரை பால் தாக்கரேவை விமர்சித்து ஆர்.கே.லக்ஷ்மண் 
ஒரு கார்ட்டூன் கூட வரைந்தது கிடையாதாம். இவன்
என்ன பைத்தியமா என்ற கேள்வி எழுப்பியதோடு 
நிறுத்திக் கொள்வாராம்.

நண்பர் என்பதற்காக பால் தாக்கரே செய்த அராஜகங்களை
கண்டு கொள்ளாமல் இருந்ததன் மூலம் ஒரு
பத்திரிக்கையாளராக ஆர்.கே.லக்ஷ்மண்  தனது
கடமையிலிருந்து தவறியுள்ளார்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப் படுத்திய
கார்ட்டூனால்   அவர் மீது வைத்திருந்த மரியாதை
சற்று சரிந்தது  என்றால் இது இன்னும் கொஞ்சம்
சரித்துள்ளது. 

2 comments:

  1. natpaal appadi seithiruppaar....

    ReplyDelete
  2. ராமன் அவர்களே! கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டீர்களோ என்று தோன்றுகிறது! 'இவன் என்ன பைத்தியமா? என்ற கேள்வியை விட சிற்ந்த விமரிசனம் உண்டா? ---காஸ்யபன்

    ReplyDelete