Monday, November 5, 2012

காங்கிரஸ் பேரணியின் லட்சணம் இதுதான்

பிரம்மாண்டமான பேரணி,
எதிர்க்கட்சிகளுக்கு தக்க பதிலடி,
சீர்திருத்தங்களுக்கு ஆதரவான பெருந்திரள் பேரணி
என்றெல்லாம்
முதலாளித்துவ ஊடகங்கள்
வர்ணித்து புளகாங்கிதமடைந்த
பேரணியின் லட்சணம் இதுதான்.

தேசத்தின் நலனுக்கு எதிராக
சோனியா, ராகுல் வகையறாக்கள்
முழங்கிக் கொண்டிருப்பதைக் கூட
கவனிக்க முடியாமல்
காங்கிரஸ் தொண்டர்கள்
மும்முரமாக இருப்பதைக்
கவனியுங்கள்.



கட்சிக் கொடியையே
மதிக்காத இந்த 
ஜென்மங்கள் 
குவார்ட்டருக்கு வந்தார்களோ?
பிரியாணிக்கு வந்தவர்களோ?

இந்தக் கும்பலைத்தான்
முதலாளித்துவ ஊடகங்கள்
சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக
திரண்ட மக்கள் வெள்ளம்
என்று 
பீற்றிக் கொள்கின்றன.

ஆனால் லட்சோப லட்சம்
தொழிலாளர்கள் தங்களின்
சொந்தக் காசை செலவழித்து
நாடாளுமன்றம் நோக்கி வந்த
பேரணிகளை இவர்கள்
சீண்டியது கூட கிடையாது.

 

1 comment:

  1. காசு, பிரியாணி குடுத்து கூட்டியாந்தவன் வேற என்னதான் பண்ணுவான்......

    ReplyDelete