Saturday, November 24, 2012

நாய்களே எவ்வளவோ மேல்

இது கண்டிப்பாக அரசியல் பதிவு அல்ல.
ஒரு அனுபவம் தந்த வெறுப்பின் வெளிப்பாடு.

இன்று அரக்கோணம் போய் விட்டு
காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம்.
பாதி தூரம் கிராமத்து சாலைகள் வழியாக
பயணம்.

மாலை வேளை, டாஸ்மாக் கடைகளில்
மும்முர விற்பனை.


வழி நடுவில்
அங்கங்கே
சாலைக்கு நடுவில் நாய்களும் நின்றன.
டாஸ்மாக் குடிமகங்களும் நின்றிருந்தார்கள்.

ஹாரன் அடித்தால் 
நாய்கள் ஒதுங்கிப் போனது.

ஆனால் குடி மக்களோ 
" இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா?"
என்பது போல முறைத்துப் பார்த்தார்களே தவிர
அவ்வளவு சீக்கிரமாக ஓரத்திற்குப் போகவில்லை.

அந்த வெறுப்பில்தான் சொன்னேன்

 நாய்களே எவ்வளவோ மேல்

2 comments:

  1. இவனுங்களை நாய்க்குச் சமம்னு சொல்லியிருந்தா அது எவ்வளவு கேவலாமாயிருந்திருக்கும் [நாய்க்கு]?

    ReplyDelete
  2. Please don't insult dogs. I condemn it.

    ReplyDelete