Monday, November 21, 2011

மம்தா பாசிச ஆட்சி நடத்துகின்றார் - ஞான பீட விருது பெற்ற மகாஸ்வேதா தேவி சாடல்



மம்தா பானர்ஜி  ஒரு பாசிச ஆட்சி நடத்துவதாக ஞான பீட விருது
பெற்ற முதுபெரும்  எழுத்தாளர்  மகாஸ்வேதா தேவி கூறியுள்ளார்.


அவர் சார்ந்த ஓர் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப் 
பட்ட பின்னணியில்  மகாஸ்வேதா தேவி இவ்வாறு வெடித்துள்ளார். 
சுதந்திரத்திற்கு பின்பு இது போல நடந்ததே இல்லை என்றும் அவர்
புலம்பியுள்ளார். 


இதிலே  குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் 
மகாஸ்வேதா தேவி ஒன்றும்  இடதுசாரி ஆதரவாளர் அல்ல. கடந்த
ஆட்சியை கடுமையாக விமர்சித்து  மம்தாவை ஆதரித்தவர். 


மம்தாவும்  மாவோயிஸ்டு ஆதரவாளர்  என திருப்பித் தாக்கியுள்ளார். 


மக்களின் ஆதரவை விரைவில் இழப்பது யார் என்று அம்மாவிற்கும்
மம்தாவிற்கும்  போட்டி நடக்கிறது போலும்!  

1 comment:

  1. ஓட்டு போடறவங்கள விட, ஓட்டு இவங்களுக்கு போடுங்க அப்படின்னு சொல்றவங்க யோசிக்க வேண்டிய காலம் வந்துடுச்சு

    ReplyDelete