Friday, November 18, 2011

இது அராஜகமன்றி வேறென்ன?

இன்று  காலை  திருச்சி செல்ல வேலூரிலிருந்து 
திருவண்ணாமலை  பேருந்து ஏறினேன். நேற்று
தொலைக்காட்சியே  பார்க்கவில்லை. 


வழக்கம் போல இருபத்தி ஐந்து ரூபாய் எடுத்தால்
நடத்துனர் நக்கலாய் பார்த்து " உங்களுக்கு விஷயம்
தெரியாதா, சார்ஜ் ஏறிப்போச்சு, முப்பத்தி ஏழு ரூபாய்
கொடுங்க" என்றார்.   


எல்லாம் ஏறிப் போய்விட்டது. அதுவும் சாதாரணமாக
அல்ல, மிகக் கடுமையாக. ஐம்பது சதிவிகித உயர்வு. 


ஜெ வின் அராஜக தர்பார் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
இது யாருக்கும் நல்லதல்ல.


பி.கு. இதோ இப்போது வேலூர் திரும்ப  திருச்சியில் ஆம்னி
பஸ்  எறினால், இன்று இருநூற்றி ஐம்பது, நாளை முதல்
முன்னூறு  என்கிறார்கள்.  
 

2 comments:

  1. விலை வாசி மட்டுமே ஏறி இருக்கிறது... சாதாரண மக்களின் ரத்த அழுத்தமும் தான்

    ReplyDelete
  2. சென்னையில் சாதரணமான பேருந்துகளில் exp என்று மிகச்சிறிய அளவில் எழுவிட்டு, இருண்டு மடங்கு வசூலிக்கிறார்கள் (கொள்ளை அடிக்கிறார்கள்).

    ReplyDelete