Wednesday, November 30, 2011

நான்காய் பிரித்தால் நஷ்டமல்லவோ ?





உத்திர பிரதேசத்தை  நான்காகப் பிரிப்பது  என்ற முடிவை 
மாயாவதி  அவசரப்பட்டு  எடுத்து விட்டார் என்றே 
தோன்றுகின்றது. 


நான்கு  மாநிலத்திலும்  அவரது  கட்சி  வெற்றி பெறுகின்றது
என்று  வைத்தாலும் கூட  அவரால் நான்கு மாநிலத்திலும்
முதலமைச்சராக முடியாதே! அதற்கு  அரசியல் சாசனத்தில் 
இடம் கிடையாதே!  வேறு யாராவது ஒருவரைத்தானே 
முதலமைச்சர் ஆக்க வேண்டும்! அம்மா, மாயா, மம்தா 
ஆகிய மூவருக்குமே  அடுத்தவருக்கு முக்கியத்துவம்
கொடுக்க மனம் வராதே!


ஏதாவது  மாநிலத்தில் தோற்றுப் போய் விட்டால் அந்தப்
பகுதியிலிருந்து  வருகின்ற  வருவாய்  அடிபட்டு விடுமே,
அது நஷ்டமாயிற்றே! 




அதே போல் அவர் போட்டியிடும்  மாநிலத்திலேயே 
அவர் கட்சி தோற்றுப் போய் விட்டால் முதலுக்கே 
மோசமாய் விடுமே? 

என்ன கணக்கோ! என்ன எழவோ?

No comments:

Post a Comment