Wednesday, November 9, 2011

இதுதானப்பா சூப்பர் பல்டி! வடிவேலுவை விட மிகப் பெரிய டம்மி பீஸ்



பெட்ரோல் விலையை குறைக்கவில்லை என்றால் மத்திய
அமைச்சரவையிலிருந்து விலகப்போகிறோம், ஆட்சிக்கு 
ஆதரவு கிடையாது என்றெல்லாம்  வீர வசனம் பேசிய 
வங்கத்து புலி இப்போது பூனையாகிவிட்டது. 
"இந்த ஒரு முறை பரவாயில்லை, மறுபடியும் உயர்த்தினா"
என்று டயலாக் பேசி விட்டு நாடகத்தை முடித்து விட்டது.
திரைப்படத்தின் பெயர் நினைவிற்கு வரவில்லை.


சுந்தர்.சி யை வடிவேலு மிரட்டுவார்.
என் ஏரியாவுக்கு வா, 
தெருவுக்கு வா,
வீட்டிற்கு வா 


அப்போது என் வீரத்தை காட்டுகின்றேன் என.
கடைசியாக வடிவேலு வீட்டிற்கு சுந்தர்.சி 
வந்தவுடன் நான் ஒரு டம்மி பீஸ் எதுவும் 
செய்யாதே என காலில் விழுந்து 
கதறுவார். 
வடிவேலுவை விட மிகப் பெரிய டம்மி பீஸ்
என மம்தா நிரூபித்து விட்டார்.

1 comment:

  1. முடிவில் வடிவேலுவுக்கு கிடைத்ததென்னவோ சில லட்சங்கள் தான். அம்மணி எதிர்பார்ப்பது லட்சம் கோடிகள்....தெரியுமா...?!!

    ReplyDelete