பெண்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றுள்ளது.
இரண்டாவது முறையாகவா?
இதுதானே முதல் முறை என்று புருவம் உயர்த்துகிறீர்கள் அல்லவா!
சிவ கார்த்திகேயன் தயாரித்து நடித்த "கனா" திரைப்படம் நினைவில் உள்ளதல்லவா!
எனக்கு பிடித்த படம் அது. அப்போது எழுதிய பதிவு கீழே . . .
அந்த திரைப்படத்திற்கும் கோப்பையை நிஜத்தில் வென்ற இந்திய அணிக்கும் சில ஒற்றுமை இருக்கிறது.
இரண்டிலும் இந்தியா ஆஸ்திரேலிய அணியைத்தான் அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும்.
திரைப்படத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை வெல்ல முக்கியமான காரணமாக இருந்த கௌசல்யா முருகேசன் அந்த அணியில் இடம் பெறக் கூடாது என்று சதிகள் நடந்தது.
அது போலவே நிஜப் போட்டியில் இந்தியா வெல்ல காரணமாக இருந்த ஜெமிமா விற்கு எதிராக சங்கிகள் சதி செய்தனர். இப்போதும் அந்த சதியை தொடர்கிறார்கள்.
இந்தியப் பெண்களால் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று முதன் முதலில் நம்பக்கூடிய விதத்தில் "கனா" காண்பித்தது.
அந்த "கனா" இன்று நிஜமாகி விட்டது.
வெற்றியை சாத்தியமாக்கிய வீரர்கள், பயிற்சியாளர்கள், இந்திய பெண்கள் கிரிக்கெட் முன்னேற அடித்தளம் அமைத்துக் கொடுத்த முந்தைய காலத்தின் வீரர்கள் ஆகியோர் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
பிகு: எழுதி சில நாட்களானதுதான். . .


No comments:
Post a Comment