Tuesday, June 25, 2019

அடுத்து என்ன பாஸ் உடன்கட்டையா?




கர்னாடக இசைக்கலைஞர் திருமதி சுதா ரகுராமனின் மகள் ஒரு ஆப்பிரிக்கரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

நம் கலாச்சாரக் காவலர்களுக்கு இது போதாதா?

தன்னை வசை பாடுகிறார்கள் என்று பொய்யாய் புலம்பும் ஜெயமோகன் படித்தால் வசை என்றால் என்ன என்று புரிந்து கொள்வார்.

கொச்சையாக, ஆபாசமாக பேசுவது தொடங்கி, அவர் ஏதோ மிகப் பெரிய துரோகம் செய்து விட்டதாகவும் அதனால் அவரை தியாகராஜ ஆராதனை தொடங்கி எந்த சபாவிலும் மேடையேற்றக் கூடாது என்பது வரை ஏராளமான கட்டளைகள்.

அது மட்டுமல்ல இனிமேல் பால்ய விவாகங்களை அனுமதிக்க வேண்டுமாம். அப்போதுதான் இது போன்ற இழிவுகள் நடக்காதாம்.

அடப்பாவிகளா!

திருமணம் என்பது அடிப்படையில் அந்த குடும்பத்து விஷயம். திருமணம் குறித்து முடிவெடுக்கும் முதன்மையான உரிமை மணப்பெண்ணும் மணமகனுக்குமே உண்டு.பெற்றோருக்கே அந்த முடிவில் தலையிடும் உரிமை கிடையாது என்பதுதான் சட்டபூர்வமானது.

அப்படி இருக்கையில் அதில் தலையிட ஊரான் உங்களுக்கெல்லாம் என்ன உரிமை உள்ளது?

எத்தனையோ எதிர்ப்புக்கள், கலவரங்கள், ஆணவக் கொலைகள் இருந்தும் கூட இயல்பான ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு பிரபலத்தின் மகள் மத மறுப்பு திருமணம் செய்து கொள்வதால் பொங்கி எழும் புத்திசாலிகளே, இன்று பால்ய விவாகம் வேண்டும் என்று கோரும் அறிவாளிகளே, நாளை யாராவது ஒரு பிரபலத்தின் விதவை மகள் மறுமணம் செய்து கொண்டால் மீண்டும் உடன்கட்டை முறையை கொண்டு வரச் சொல்வீர்களோ?

மீண்டும் சொல்கிறேன்.

திருமணங்கள் அந்த குடும்பத்தின் சொந்த விஷயம். அதில் தலையிட ஊராருக்கு உரிமையில்லை.

உங்களால் அதனை ஏற்க முடியவில்லையென்றால்
நீங்கள் வேண்டுமானால் தற்கொலை செய்து கொள்ளுங்கள்.
அதற்கு உங்களுக்கு உரிமை நிச்சயமாக உண்டு.

1 comment:

  1. தன் மகள் எவன் கூட ஓடிப்போனாலும் அத கேட்க பெற்றோர்கே உரிமையில்லை எனும்பொழுது மற்றோர்க்கு என்ன கவலை!

    ReplyDelete