Saturday, June 22, 2019

அந்த லெட்டர் தமிழில் இருந்திருக்குமோ?



"ஒரே நாடு, ஒரே தேர்தல்" (இது பற்றி விரிவாக பிறகு எழுதுவேன்)  பற்றி விவாதிக்க நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அதிமுக சார்பாக போன தமிழக மப்பு அமைச்சர் சி.வி.சண்முகத்தையும் "காஷ்மீர், பியூட்டிபுல் காஷ்மீர்" புகழ் எம்.பி நவனீத கிருஷ்ணனையும்  அரங்கத்திற்கு  உள்ளே அனுமதிக்காமல் துரத்தி விட்டார்கள்.

காரணம் என்ன தெரியுமா?

அக்கூட்டம் கட்சித் தலைவர்களுக்கானதாம். கடிதமே அப்படித்தான் அனுப்பியுள்ளார்களாம். எந்த கட்சியின் சார்பில் யார் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு முடிவெடுப்பது எல்லாம் சரியல்ல என்பது வேறு விஷயம்.

ஆனால் வந்த கடிதத்தை ஒழுங்காக படித்தார்களோ என்னவோ தெரியவில்லை, வேறு ஆட்களை அனுப்ப பாஜக அரசு கூட்டணிக் கட்சியான அதிமுக வை அசிங்கப்படுத்தி திருப்பியனுப்பி விட்டது.

மத்தியரசு அனுப்பிய கடிதம் ஒரு வேளை தமிழில் இருந்திருக்குமோ? 

பாஜக கூட்டணிக்குப் பிறகு இவங்களுக்குத்தான் தமிழே பிடிக்கறதில்லையே!  

No comments:

Post a Comment