Tuesday, June 11, 2019

விரசமில்லா சிரிப்புக்காரர்




நேற்று மறைந்த நகைச்சுவைக் கலைஞர் கிரேசி மோகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

நாடகக் காலம் தொடங்கி சீரியல்கள், திரைப்படங்கள் என்று தமிழர்களை மனம் விட்டு சிரிக்கச் செய்தவர்.

சீரியல்களின் துவக்க காலத்தில் அவரும் அவரது தம்பி மாது பாலாஜியும் சீனுவும் அடித்த கூத்துக்களை யாரால் மறக்க முடியும்!

கமல ஹாசனின் சீரியஸ் படங்களை விட அவரது காமெடி படங்கள் வசூலை அள்ளிக் குவித்தது என்றால் அதற்கு கிரேசி மோகனின் நகைச்சுவை வசனங்கள் ஒரு முக்கியக் காரணம். அபூர்வ சகோதரர்கள் ஒரு சீரியஸான பழி வாங்குதல் படம்தான். ஆனாலும் அதில் நகைச்சுவைக்கு குறைவில்லை.

மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, வசூல் ராஜா என்று ஒரு பெரிய பட்டியலே போட முடியும்.

ஆரம்ப காலத்தில் மாற்றுத் திறனாளிகளை, அதிலும் குறிப்பாக செவித் திறனற்றவர்களை கிண்டலடிக்கிறார் என்று விமர்சனம் உண்டு. பிறகு அதை தவிர்த்து விட்டார்.

ஆனால் அவரது வசனங்களில் இரட்டை அர்த்தமோ, விரசமோ கிடையாது. அதற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.

கிரேசி மோகனுக்கு அஞ்சலியாக அவர் நம்மை சிரிக்க வைத்த


 


1 comment:

  1. விரசமில்லா சிரிப்புக்காரர் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

    ReplyDelete