Thursday, August 1, 2013

உங்கள் அக்கினி பரிட்சை அவமானம்தான் அம்மையாரே






அம்மையாரே....
இது என்ன
அக்கினிப் பரிட்சை?

எதிர்த்து நின்றவர்
கையை உடைத்து
காலை உடைத்து
உயிர் பறித்து
உருட்டி, மிரட்டி
மக்களை மவுனமாக்கி
ஜனநாயகத்தை
இருளாக்கி
அராஜகத்தில் வென்ற பின்பு
அம்மையார் சொல்கிறார்
“ அக்கினிப் பரிட்சையில்
வென்றேன்” என.

அக்கினிப் பரிட்சை
என்றாலே அசிங்கம்தானோ?

சீதைக்கு ராமன் வைத்த
அக்கினிப் பரிட்சை
இதிகாச அவமானம்.

அம்மையார் வென்றதாய்ச்
சொல்லும் அக்கினிப் பரிட்சை
இன்றைய அவமானம்.


1 comment:



  1. சீதைக்கு ராமன் வைத்த

    அக்கினிப் பரிட்சை

    இதிகாச அவமானம்.


    idhai S ராமன் solvadhu
    அதிக அவமானம்.


    Ungalukku Mamatha Rasjiyamum,
    RamaRajiyamum Ondrey-vaa?.

    ReplyDelete