Friday, August 9, 2013

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் மன்மோகா?





நேற்று வரை
ஒரே அமைப்பின் தோழர்கள்
இன்றோ
எதிர் எதிர் நின்று
மோதிக்கொள்ளும் வைரிகள்.

கடைகளை அடை,
கல்லெறிந்து தாக்கு,
பேருந்தைக் கொளுத்து,
பெரிதாய் கலவரம் செய்.

இரண்டாய்ப் பிரி
மூன்றாய்ப் பிள
நான்காய் வகு

அடைத்து வைத்த
அலாவுதீன் பூதம் போல
அங்காங்கே
பிரிவினை முழக்கம்.

அலைக்கற்றையா?
ஆழ்பூமி நிலக்கரியா?
சில்லறை வர்த்தகமா?
நிதித்துறை சீர்திருத்தமா?
பெட்ரோல் விலை உயர்வா?

அனைத்தும் பின்னே போய்
ஆந்திரா தொடருமா?
உடையுமா
என்றுதானே
எங்கெங்கும் பேச்சு....

நீ மட்டும் நிம்மதியாய்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய்
மன்மோகா?

3 comments:

  1. அனைத்தும் பின்னே போய்
    அங்காங்கே
    பிரிவினை முழக்கம் :(

    ReplyDelete
  2. தான் செத்தாலும் அடுத்தவனுக்கு தொல்லை கொடுக்காமல் சாக மாட்டாரா இந்த ஆள்?

    ReplyDelete
  3. மருத்துவரும் தமிழகத்தை பிரிக்க சொல்கிறார். ஒரு வேளை இது "பிரித்தாளும்" சூழ்ச்சியோ?

    ReplyDelete