Friday, February 22, 2013

எப்படி போனது 25,000 கோடி ரூபாய்?





தொழிலாளர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தம் மூலமாக இருபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முதலாளித்துவ ஊடகங்கள் புலம்பிக் கொண்டே இருக்கிறது.

இந்த கணக்கை எப்படி போட்டார்கள் என்று அவர்களால் சொல்ல முடியுமா?

வெற்று பரபரப்பிற்காக, தொழிற்சங்கங்கள் மீது வெறுப்பை உருவாக்குவதற்காக  அவர்களாகவே பரப்பும் கட்டுக்கதை இது.

இவ்வளவு இழப்பு வரும் என்று இந்த பொருளாதார அதி மேதாவிகளுக்கு முன்னமே தெரியுமானால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு அரசுக்கு அறிவுரை சொல்லி இருக்கலாமே?

இல்லை அரசாங்கத்தின் அசமஞ்சத்தனமும்தான் இந்த இழப்பிற்கு காரணம் என்று சேர்த்து சொல்லியிருக்கலாமே?

உண்மையில் இழப்பு என்பது இரண்டு நாட்கள் ஊதியத்தை இழந்த தொழிலாளர்களுக்குத்தான்.

ஆனால் அவர்கள் அதை இழப்பாக கருதவில்லை, இந்தியாவைப் பாதுகாக்க, அமெரிக்காவிடமும் பன்னாட்டுக் கம்பெனிகளிடமும் அடமானம் வைக்கப்பட்டுள்ள இந்தியாவை மீட்பதற்காக செய்துள்ள தியாகமாகத்தான் பெருமித உணர்வோடு பார்க்கிறார்கள்.

1 comment: