Sunday, February 24, 2013

இந்த தைரியம் இந்திய அரசுக்கு உண்டா?

ஸ்பெயின் நிறுவனத்தை அரசுடைமையாக்க பொலிவியா ஜனாதிபதி உத்தரவு



சுக்குர். பிப். 22-பொலிவியாவில் செயல் பட்டு வந்த ஸ்பெயின் நிறு வனத்தைஅரசுடைமையாக்க பொலிவியா ஜனாதிபதி இவோ மொரேல்ஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.பொலிவியாவின் லா பாஜ், கோச்சபாம்பா மற் றும் சான்டா க்ரஸ் ஆகிய விமான நிலையங்கள் கடந்த 1997ம் ஆண்டு தனியார் மய மாக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத் தை நிர்வகிப்பதற்கான ஒப் பந்தத்தை பொலிவியா அரசு ஸ்பெயின் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியது. இந்த ஒப்பந்தம் 2025ம் ஆண்டு முடிவடைகிறது. இந்நிலை யில், ஸ்பெயின் நிறுவனம் ஒப்பந்தத்தின் அடிப்படை யில் முதலீடுகளையும், லாபத்தையும் உருவாக்க வில்லை. 

இதனைத் தொடர்ந்து, அதனை தேசிய மயமாக்கி முழுப்பொறுப்பையும் அந் நாட்டின் பொதுத்துறை, சேவைகள் மற்றும் வீட்டு வசதி அமைச்சகம் கையகப் படுத்தும்படி பொலிவியா ஜனாதிபதி இவோ மொரேல்ஸ் அதிரடியாக உத்தரவு பிறப் பித்துள்ளார். மேலும், இங்கு வரும் பொதுமக்க ளுக்கு பாதுகாப்பை உறு திப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளும்படி அந் நாட்டு ராணுவத்திற்கும் உத் தரவிட்டுள்ளார்.

இதேபோன்று கடந்த ஆண்டு மே மாதம் பொலி வியாவிற்கு 75 சதவிகித மின்பாதையை வழங்கி வந்த ஸ்பெயின் நிறுவனத்தை யும், டிசம்பர் 30ம் தேதி ஸ்பெயினின் மேலும் இரண்டு மின்சாதன விற்ப னை நிறுவனங்களையும் பொலிவியா அரசு தேசிய மயமாக்கியது குறிப்பிடத் தக்கது. 

ஸ்பெயின் கோபம் பொலிவியாவின் இந்த நடவடிக்கைக்கு ஸ்பெயின் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. மேலும், பொலி யாவுடனான உறவை மறு ஆய்வு செய்யவுள்ளதாக வும் ஸ்பெயின் அரசு மிரட் டல் விடுத்துள்ளது.

நன்றி - தீக்திர் 23.02.2013

No comments:

Post a Comment