Thursday, January 17, 2013

பாவம் தா.பாண்டியன், ஆறுதல் பரிசு மட்டும்தான்



பாவம் பட்ட பாடெல்லாம் வீணாகி விட்டதே,
மாநிலங்களவை சீட்டிற்காக 
எது நடந்தாலும் பரவாயில்லை
என்று ஜெ வை மனம் குளிர வைப்பதுதான்
முக்கியம் என்று காத்துக் கிடந்த,
ஜெ முகஸ்துதி அரசியல் செய்து
வந்த தோழர் தா.பாண்டியனுக்கு
நாற்பது இடங்களிலும் நாங்களே
நிற்போம் என்று சொல்லி
அம்மா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

போனா போகிறது என்று 
ஆறுதல் பரிசாக  அம்பேத்கர் விருது
கொடுத்து தேற்றியுள்ளார் ஜெ.

தமிழகத்தில் நடைபெறும் தீண்டாமைக்
கொடுமைகளை கொஞ்சம் கூட
கண்டு கொள்ளாமல் இருந்ததற்கு
அம்பேத்கர் விருது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள்
இயக்கத் தலைவி விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு
கடந்த ஆண்டு பெரியார் விருது கொடுத்தது
போல இந்த ஆண்டு தா.பா விற்கு
அம்பேத்கர் விருது.

.பி.எஸ்ஸை விட மிகப் பெரிய
விசுவாசிக்கு இது கூட இல்லையென்றால்
எப்படி?


2 comments:

  1. உள்ள நிலையை சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் ..
    தோழர் (யாருக்கு) தா பா மேலும் எதாவது கிடைக்காதா என்ற கனவில் இருக்கலாம் ..

    ReplyDelete