Sunday, January 27, 2013

காவல்துறை திருந்தவே திருந்தாதா?


 


இது வெள்ளிக்கிழமையன்றே எழுதியிருக்க வேண்டிய
பதிவு. நேரமின்மையால் இன்றுதான் எழுதுகிறேன்.

வியாழன் அன்று அதிமுக, மத்தியரசைக் கண்டித்து
ஆர்ப்பாட்டம் நடத்தியது. வேலூரிலும் நடந்தது. மற்ற
கட்சிகளோ, தொழிற்சங்கங்களோ, ஆர்ப்பாட்டம் நடத்த
வேண்டும் என்றால் வேலூரில் இரண்டே இரண்டு
இடங்கள் மட்டும்தான். 

தலைமை தபால் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
நடத்த அனுமதி தருவதே இல்லை. மறியல் செய்து
கைதாகும் போராட்டம் என்றால் கூட ஏக கெடுபிடி
இருக்கும்.

ஆனால் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அங்கே
அனுமதி அளித்தது மட்டுமல்ல, அந்த பரபரப்பான
சாலையையே அடைத்து விட்டார்கள். மக்களை
வேறு பாதையில் திருப்பி விட்டார்கள்.

அதனால் ஏராளமான போக்குவரத்து நெரிசல்,
குழப்பம் எல்லாமோ.

ஆளும்கட்சி என்றால் ஜால்ரா அடிக்கும் போக்கை
காவல்துறை மாற்றிக் கொள்ளாதா?

பின் குறிப்பு : படம் வேலூர் படம் அல்ல, சென்னை 
ஆர்ப்பாட்டம்.
 
 

No comments:

Post a Comment