Monday, January 7, 2013

தகப்பன்சாமி மு.க.அழகிரி





முன்பொரு முறை கலைஞர் சொன்ன பிரபலமான வாக்கியமான ‘திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல “ என்பதையே அவரது மகன் அழகிரி அவருக்கு நினைவு படுத்தியுள்ளார். முந்தைய பதிவில் சொன்னது போல திமுக தலைவர் தேர்வு குறித்து நான் எதுவும் சொல்லப் போவதில்லை. வேறு யாராவது இது போல சொன்னால் பாய்ந்து தாக்கும் கலைஞர் மகனுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்? பிள்ளையின் பாடத்தை ஏற்பாரா? கண்ணதாசன் பாடல் போல “பிள்ளைய பெத்தா கண்ணீரு” என்பாரா?

No comments:

Post a Comment