Wednesday, April 27, 2011

மரியாதையாய் கூப்பிடு


 
என் மகனின் கோபம் 

நேற்று அலுவலகம் முடிந்து வந்ததும்  என் மகன் அப்படியே  கோபத்தில் 
 கொந்தளித்து விட்டான்." இந்த ஹர்ஷ வர்த்தனுக்கு  எவ்வளவு  கொழுப்பு பார் " என்று  புலம்பிக் கொண்டே இருந்தான்.   விஷயம் மிகவும்  பெரிதாக இல்லை. 

அவனுடைய  ஒன்று விட்ட தம்பி ஹர்ஷ வர்த்தன் யு.கே.ஜி படிப்பவன். இவனோ  பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி  காத்திருப்பவன். 
பனிரெண்டு வயது வித்தியாசம் இருந்த போதும் ஒரு நாளும் அண்ணா என்று  அழைத்தது கிடையாது.  நந்து என்றும்  வாடா, போடா என்றும் தான்
அழைப்பான். 
அதுவல்ல பிரச்சினை. ஹர்ஷவர்த்தனது  வீட்டிற்கு ரகுநந்தன் சென்றுள்ளான். கிரிக்கெட் விளையாடியுள்ளார்கள்.  பக்கத்தில் உள்ள
சிறுவர்களும் விளையாடியுள்ளனர்.  அப்போது ஒருவன் அண்ணா நீங்கள் 
பந்து போடுங்கள்  என்று  சொன்னதும்  ஹர்ஷவர்த்தன் உடனே தலையிட்டு

" எதற்கு அண்ணா என்று கூப்பிடுகிறாய். நந்து என்றே கூப்பிடு "   

என்று  சொன்னதும்  இவன் கடுப்பாகி விட்டான். இவன் என்னை அண்ணா 
என்று கூப்பிடாதது மட்டுமல்ல மற்றவர்கள்  கூப்பிட்டாலும் தடுக்கிறானே  என்பதுதான்  புலம்பலுக்கு காரணம். 

மரியாதை வேண்டும் என்ற ஆசை  எல்லோருடைய உள்ளுணர்விலும் 
ஒளிந்து  கொண்டுதான்  இருக்கிறது.  

என்ன கலைஞர் போன்ற சிலர் தாங்களே அதைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் 

2 comments:

  1. நியாயமான கோவம் தான்..
    சமாதா பண்ணி வையுங்க..

    ReplyDelete