Friday, April 8, 2011

பண நாயகத்தின் சீற்றம்

ஜனநாயகம்  தழைக்க 
தேர்தலில்  வாக்களிப்பீர்! 
தேர்தல் ஆணைய அறிவிப்பு 
சொன்னது. 
கட்டுக்கட்டாய் நோட்டுக்களோடு
பண நாயகம் 
பல்லிளித்து சொன்னது.
 நாங்கள் தழைத்து வளரவே 
தேர்தல் என்று.

வெற்றி பெற இத்தனை
செலவு, பணமெல்லாம் 
தேவையா என 
தெரியாத்தனமாய் 
கேட்டு வைத்தேன்.

யார் சொன்னது செலவு 
என்று 
ஒன்று வைத்தால் நூறு 
கிடைக்கும் 
அற்புத வணிகமல்லவா இது

ஆணவமாய் சொன்ன 
பண நாயகம் 
கோபத்தில் சீறியது

வணிகத்தை முடக்கப்
பார்த்தால் 
அவசர நிலை காலம்  
என்று சொல்லாமல் 
நியாயவான்கள்
என்றா பாராட்டுவேன் 

   

No comments:

Post a Comment