Wednesday, April 20, 2011

மேதகு ஆளுனரை கைகழுவிய காங்கிரஸ் கட்சி

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர்  இக்பால்சிங் சரியான மனிதரல்ல, ஒரு ஊழல் பேர்வழி என்ற குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கட்சிதான் முதன் முதலில் வைத்தது. இவர்களுக்கு  வேறு வேலை இல்லை என்று அப்போது புறம் தள்ளியவர்கள்  இப்போது வாயடைத்து நிற்கின்றார்கள். 

ஒரு கொடுங்கோல் அரசன் இறக்கும் தருவாயில் தனது மகனிடம் மக்கள் என்னை நல்லவர்கள்  என்று கூறும்படி  ஏதாவது செய் என்று சொல்லி விட்டு செத்தானாம். அவனை விட இவனது அராஜகம் மிக அதிகாமாகப் போக மக்கள் சொல்லத் தொடங்கினார்கள் - " இவனை விட இவன் அப்பா எவ்வளவோ நல்லவன் " என்று.
அது போல முன்பிருந்தவர்களுக்கு  நல்ல பெயர் வாங்கித்தருவதில் நமது ஆட்சியாளர்களுக்கு ஈடு இணையே கிடையாது. அருணாசலப் பிரதேச மாநில அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டி அம்மாநில முன்னாள் முதல்வர் முகுந்த் மிதாயை  புதுச்சேரி கவர்னராக்கினார்கள். ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம் என்று கேளிக்கைகளில் மட்டுமே 
திளைத்துக் கிடந்த முகுந்த் மித்தாய் எவ்வளவோ மேல் என்று புதுவை மக்களை பேச வைத்த பெருமை இக்பால்சிங்கிற்கே உண்டு. 

குருத்வாராவிற்கு  இடம் ஒதுக்குவதில்  முறைகேடு,

தனது அறக்கட்டளைக்கு மருத்துவக் கல்லூரி துவக்க அனுமதி பெறுவதில் முறைகேடு,
ராஜ்நிவாஸ் அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தல்  

ஆகிய முறைகேடுகளை  மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டிய போது,
இதெல்லாம் ஒரு மேட்டரா என்று பார்த்தவர்கள்  அசன் அலி கான் 
பாஸ்போர்ட் வாங்க இவர் செய்த வேலை பற்றி அம்பலமானதும்தான் இந்த ஆள் சரியான தில்லாலங்கடி பேர்வழி என்று உணர்ந்து கொண்டார்கள்.  

இவரது நண்பர்  ஒரு காலி விண்ணப்பத்தை கொடுப்பாராம், அந்த காலி விண்ணப்பத்திற்கு இவர் பரிந்துரை செய்வாராம், யாருக்கு பாஸ்போர்ட் என்பதே இவருக்கு தெரியாதாம். இந்தியர்கள் எல்லாம் காதில் முழம் முழமாய் பூமாலைகளை சுற்றி வைத்துக் கொண்டிருப்பதாக இவருக்கு 
எண்ணம். பிறகு அந்த பாஸ்போர்ட்டை இவரது காவல் அதிகாரி பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து ஏன்  பெற்றுக்கொண்டாராம்? 

பிரச்சினை வெடித்த பின்பு வழக்கம் போல் எங்களுக்கு இதில் தொடர்பு 
கிடையாது என்று பரம யோக்கியர்கள் போல காங்கிரஸ் கட்சி கைகழுவி விட்டு விட்டது. ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகிய உத்தமர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வந்தால் மட்டும்தான் காங்கிரஸ் கட்சி வீறு கொண்டு 
எழும் என்பதை காங்கிரசின் ஊழல் பெருச்சாளிகளே  கவனத்தில் கொள்ளுங்கள். அ.ராசாவை  பாதுகாக்கும் கலைஞரின் திமுக அல்ல 
உங்கள் காங்கிரஸ் கட்சி.


 

1 comment:

  1. காங்கிரஸ் அயோக்யர்களின் கூடாரம்.

    ReplyDelete