Thursday, April 21, 2011

உற்ற நண்பரின் பெயரையே மறந்த கலைஞர்

குடும்ப முன்னேற்ற கழகம்  என்று  தோழர் பிரகாஷ் காரத் கூறியதற்காக கலைஞர் முரசொலியில்  புலம்பியுள்ளார்.  வழக்கமான வாய்ச்சொல்லான  நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்பது தொடங்கி  ஜீவா, மணலி, இ.எம்.எஸ் உடனான  தனது பரிச்சயம்  பற்றியெல்லாம் எழுதி விட்டு " என்னைப் போய்  இப்படி எழுதி விட்டாரே, இவரது மனைவி  கட்சியில் இல்லையா " என்ற  கேள்வியோடு முடித்து விட்டார். இதற்கிடையில் தீக்கதிருக்கு திட்டு, தாபா விற்கு திட்டு, ஜி.ராமகிருஷ்ணனுக்கு  திட்டு  எல்லாம் உண்டு. நரகல் நடை, நச்சு குணம் என்ற அர்ச்சனைகள் வேறு. இதிலே என்னைப் போல கண்ணியமானவன் உண்டா என்ற சுய தம்பட்டம் வேறு.  இவரது பழைய உரைகளும் எழுத்துக்களுமே  இவரது கண்ணியத்தின்  அளவு  என்ன  என்பதை  புரிய வைத்திடுமே! இவரது கடிதத்திற்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. என்னை இன்னுமா நம்பிக் கொண்டுள்ளீர்கள் என்று புதிய கூட்டாளி வடிவேலுவின் பாணியில் உடன் பிறப்புக்களுக்கு எழுதிய கடிதத்திற்கு  தீக்கதிர் தக்க பதில் அளித்து விட்டது.

நான் சொல்லப்போவது  வேலூர் பொதுக்கூட்ட நிகழ்வு பற்றி. வேடிக்கை 
பார்க்கப்போன ஒரு தோழர்  சொன்னதுதான்.   
அக்கூட்டத்தில்  மார்க்சிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சித்து விட்டு 
அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்று நிறுத்தி பின்னால் திரும்பி 
" அவர் பெயர் என்ன? " என்று கேட்டுள்ளார். பின்னால் நின்றவர்களுக்கும் 
உடனடியாக சொல்லத் தெரியவில்லை. அதற்குள் இன்னும் மூன்று முறை  கேட்டு விட்டாராம். அதன் பின்பே விஷய ஞானம்  உள்ள  ஒரு 
உடன் பிறப்பு  பிரகாஷ் காரத் என சொல்ல அதன் பின்பு தொடர்ந்து 
திட்டியுள்ளார். 

பாவம் உற்ற நண்பரின் பெயரைக் கூட நினைவு கொள்ள முடியாத 
அளவிற்கு சிரமப்படும்  கலைஞர்  ஒய்வு எடுத்துக் கொள்வதுதான் 
அவரது உடல்நலத்திற்கு  நல்லது. கழகக் கண்மணிகள் கவனிக்க!
 
 

No comments:

Post a Comment