Sunday, April 24, 2011

சாய் பாபா - சர்ச்சைகளின் சகாப்தம் , தகர்ந்த நம்பிக்கை


புட்டபர்த்தி சத்ய சாய் பாபா மறைந்து விட்டார். அப்படிச்சொல்வதா? அல்லது முக்தியடைந்து விட்டார் என்று சொல்வதா?  அல்லது அவரது 
அவதாரம் முடிந்து விட்டதா என்று சொல்வதா? 


உலகெங்கும் உள்ள அவரது பக்தர்கள் சோகத்தில் இருக்கும் போது இந்த
இடுகை அவசியமா, நாம் எழுதுவது அவர்களின் ரணங்களை மேலும் 
கீறுமா என்ற கேள்வி எழுந்தாலும்  இப்போது எழுதாவிட்டால் வேறு 
எப்போது  எழுதுவது என்ற கேள்வி  வந்ததால் சில கருத்துக்களையும் 
கேள்விகளையும் முன் வைக்கிறேன். 



இன்று ஊடகங்களில் சத்ய சாய் பாபா பற்றி பேசுகையில்  இரண்டு விஷயங்கள்  மட்டுமே முன் வைக்கப்படுகின்றது.  



ஒன்று  அவரது நிறுவனம் செய்து வரும் பல்வேறு சேவைகள், அதிலும் 
பிரசாந்தி மருத்துவமனை பற்றியும் தெலுங்கு கங்கை திட்டத்திற்காக 
தமிழகத்திற்கு  200  கோடி ரூபாய் கொடுத்தது, 


வாரிசு என்று யாரையும் அவர் அடையாளம் காட்டாததால்  சொத்துக்கள்
யாருக்கு செல்லும்? அரசாங்கம்  எடுத்துக் கொள்ளுமா ? 


ஆனால்  சத்ய சாய் பாபாவின் அடையாளமாக இவை என்றுமே  
இருந்தது கிடையாது.  சர்வ சக்தி படைத்த கடவுளின் அவதாரம். அவர் கையிலிருந்து விபூதி கொட்டும். அவரது பக்தர்கள் வீட்டில் உள்ள 
அவரது படங்களில் இருந்து விபூதி கொட்டும். காற்றில் இருந்து 
பரிசுப் பொருட்களை வரவைப்பார். பக்தர்களின் நோய்களை அவர் 
குணப்படுத்துவார்.  அறுவை சிகிச்சையால் கூட இயலாது என்று 
சொல்லப்படுகின்ற  நோய்களெல்லாம்  அவரது அருளால் குணமாகி 
விடும். இது எப்படி என்று மருத்துவர்களே ஆச்சர்யத்தில் மூழ்கிப் 
போவார்கள்.  கூடு விட்டு கூடு பாய்வது போல அவர் எங்கும் 
தோன்றுவார்.  


இதுதான் அவரைப் பற்றிய பிம்பம். அவரது பல வேலைகள்  பயிற்சியால்
செய்யக் கூடியது என்பதை பல அமைப்புக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளன. 
ஆன்மீகவாதிகளில்  ஒரு பிரிவினர் அவரை ஏற்றுக் கொண்டதேயில்லை. 
காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகர சரஸ்வதியின் பக்தர்கள் அவர்கள் 
தரப்பு கதையாக  ஒரு விஷயம் சொல்வார்கள். 


இவர்கள் இருவரும் சந்தித்த போது  சாய்பாபா காற்றிலிருந்து ஒரு மாலை  வரவழைத்தாகவும்  இவர் கை காட்டியதும் அந்த மாலை மறைந்து  போய் விட்டதாகவும் சொல்லி சாய்பாபாவை விட சங்கராச்சாரியாரே  சக்தி வாய்ந்தவர்கள்  என்று சொல்வார்கள். 


ஆனால் இவரது பிம்பம் தகர்ந்து போனது இவரைக் கொல்ல நடைபெற்ற 
முயற்சியின் போது இவர் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்ட போதுதான்.  சர்வ சக்தி படைத்தவர் ஏன் அறைக்குள் ஓடிப்போக வேண்டும்,  அவரால் கொலைகாரர்களை தடுத்திருக்க முடியாதா என்ற 
கேள்விக்கு இன்று வரை  சரியான பதில் கிடைக்கவில்லை. 


இப்போதும் கூட அவரது பக்தர்கள் நம்பிக்கையாக இருந்தார்கள். 96 வயதில்தான் தனக்கு முக்தி என்று சொல்லியுள்ளார். ஆகவே அவருக்கு 
இப்போது மரணம் சம்பவிக்காது  என்று உறுதியாக இருந்தார்கள். இன்னும்  சிலர் அவர் உடல் நலனுக்கு எதுவுமே கிடையாது, யாரோ ஒரு 
பக்தரின்  வேதனையை  இவர் தாங்கிக் கொண்டுள்ளார், அந்த பக்தர் 
குணமான பின்பு சாய்பாபாவும்  இயல்பு நிலைக்கு வந்ந்து விடுவார் 
என்றார்கள். 


அவர்கள் அனைவரும் இப்போது உண்மையிலேயே வருத்தத்தில் 
இருப்பார்கள்.  மரணம் என்பது எப்போதுமே  வருத்தமானது. கருத்து
முரண்பாடுகள்  இருந்தாலும் எனக்கும் வருத்தமாகவே உள்ளது. 


வருத்தத்தில் மூழ்கியுள்ள அவரது பக்தர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.  உங்கள் துக்கம் ஓய்ந்ததும் சற்று சிந்தியுங்கள். 
சத்ய சாய் பாபா உங்களை ஆன்மீக வழியில் நடத்திய ஒரு மனிதர் 
என்ற தெளிவு வந்தால்  உங்களுக்கு எதிர்காலத்தில் குழப்பம் 
இருக்காது.  கடவுளின் மறு அவதாரம் என்றே நினைத்துக் கொண்டிருந்தால்   அப்போது  உங்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போன
சோகமே  உங்களை  மூழ்கடித்து விடும். 


ஆனால் சொத்துக்கள் என்ன ஆகும் என்பதுதான் சத்ய சாய் பாபாவின் 
வாழ்வை விட மிகப் பெரிய சர்ச்சையாகும் என்று தோன்றுகிறது. 

 
  

    
 

3 comments:

  1. என்ன நீங்க, அவர் உயிர்த்தெழுவார், அல்லது மீண்டும் பிறப்பார். உடல்தான் சொத்தது, ஆத்மா இல்லை. நம்பிக்கை வைச்சா, அவரைப் போலவே நீங்களும் கடவுள் ஆகலாம்.

    ReplyDelete
  2. நித்தியானந்த சாமியார் அத்தனை பொறுக்கித்தனம்
    செய்தும் அந்தாளை இன்னும் கும்பிடும் ஆட்டுமந்தைக்
    கூட்டம்தான் நம் நாட்டு ஜன்மங்கள். இவர்களை திருத்தவே முடியாது. இவர்களுக்காக கவலைப்பட வேண்டாம்

    ReplyDelete
  3. There was no need to worry about His wealth.Even at the time when He was physically active the trust was functioning under talented and honest people like the famous Economist Palkiwala and retd Supreme court Justice P.N.Bhagwati .At present too ,there are such trustees and the welfare schemes and Universities and Hospital services are running with utmost sincerity and without any advertisement .The workers and devotees can feel His Omnipresence.
    The strange thing is people never want to know how such a great service is done but how much money is there .Most of the money comes from the middle class devotees who witnessed how it is utilised properly and they too take part in person enthusiastically .The people who worry about Baba's money ( 99%) of them are who did not donate not a single paisa.
    Whether alive or dead he made lakhs of people into volunteers of social service who do not look at caste or creed.Even Jesus is dead but everyone believes in him.Most of the money in other religions are used for conversion to their religion .But nobody worries where that 1000 crores go - not even the government.
    But Sathya sai Trust money is spent as per the rules of the Trust to all people irrespective of caste or creed or religion or nation.
    It would go on for as long as the earth rotates.
    To know the truth anyone can visit and talk with the volunteers and students and the beneficiaries (the needy people from throughout India ) .Even a continuous visit to a local sai center may prove the honesty of the organisation and their loving service .
    May Baba's blessing be upon you all.

    ReplyDelete