Sunday, November 26, 2023

மாடுகள் மறியலா?

 


மேலே உள்ள புகைப்படத்தை நேற்று மாலை ஏழு மணி அளவில் எடுத்தேன். இடம் எங்கள் தெருதான். இது ஏதோ ஒரு நாள் நிகழ்வு அல்ல. எப்போதும் நடந்து கொண்டிருப்பதுதான். குறுகலான சில தெருக்களில் இரு சக்கர வாகனம் செல்வது கூட சிரமமாக இருக்கும். வேலூரின் பெருவாரியான பகுதிகளிலும் இதே நிலைதான். வேலூரில் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை தெரு மாடுகள் கடந்து விடும் போலிருக்கிறது!

சாலைகளில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை ஒருமுறை பார்த்தேன். மாட்டு முதலாளிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மாலை செய்தித்தாளின் சுவரொட்டியிலும் கூட பார்த்தேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. மாநகராட்சியின் எச்சரிக்கையையெல்லாம் மாட்டு முதலாளிகள் மதிப்பதே இல்லை.

சென்னையில் ஒரு கோர சம்பவம் நிகழ்ந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அது போன்றதொரு சம்பவத்திற்காக காத்திருக்கிறதா வேலூர் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம்?

1 comment:

  1. பொதுநல உணர்வைப் பிரதிபலிக்கும் இத்தகு பதிவுகள் தொடரட்டும் ,தோழர்!

    ReplyDelete