Wednesday, November 15, 2023

என்.ஐ.ஏ நாய்கள் மட்டும் . . .

 


ஆர்.என்.ரெவி வெட்டித்தனமாக பொழுதைக் கழிக்கும் ராஜ்பவன் முன்பாக, ஆட்டுக்காரன் சொல்லி கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் கொடுத்து, பாஜக வக்கீலால் ஜாமீன் பெற்றவன்  பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை அமித்துவின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கப் போகிறதாம்.

மொக்கை படமான சாமி 2 வில் ஒரு காட்சி வரும். வில்லன்களில் ஒருவரான ஜான் விஜயை விக்ரம் கொடூரமாக கொன்று விடுவார். போலீஸ் நாய் வரும். அங்கே இங்கே போய் விட்டு விக்ரமின் கைகளில் தஞ்சமாகும். போலீஸ்காரரான இமான் அண்ணாச்சி "எந்த போலீஸ் நாய்டா போலீஸ்காரனை காட்டிக் கொடுத்துருக்கு?" என்பார்.

ராஜ்பவன் முன்பாக  பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம், ஆட்டுக்காரனும் ஆட்டுத்தாடியும் சேர்ந்து செய்த சம்பவமாக இருக்குமோ என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் சந்தேகம்.

அப்படி இருக்கையில் என்.ஐ.ஏ நாய்கள் மட்டும் எப்படி பழைய போலீஸ்காரனுங்களை  காட்டிக் கொடுக்கும்?

No comments:

Post a Comment