Sunday, April 25, 2021

போலி முகநூல் கணக்கு -எச்சரிக்கை

 




போன மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களின் முக நூல் கணக்கைப் போல ஒரு போலி கணக்கு துவக்கப்பட்டு அந்த கணக்கிலிருந்து சிலருக்கு பண உதவி வேண்டும் என்று இன் பாக்ஸில் மெசேஜ் போயுள்ளது. கிட்டத்தட்ட அதே நேரத்தில் எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு அலுவலர் பெயரிலும் ஒரு போலி கணக்கு துவக்கப்பட்டு பணம் வேண்டும் என்ற செய்தி சென்றது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக எங்கள் கோட்டத்தின் உயரதிகாரி ஒருவர் பெயரில் ஒரு நட்பழைப்பு வந்தது. அவருக்குத்தான் ஏற்கனவே முகநூல் கணக்கு உள்ளதே! இப்போது ஏன் புதிதாக? பழைய கணக்கின் பாஸ்வேர்ட் மறந்திருக்குமா அல்லது போலிக் கணக்கா? என்று பேசிக் கொண்டோம். நேரில் பார்க்கும் போது கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  அதற்கெல்லாம் அவசியமில்லாமல் என் பெயரில் யாராவது பணம் கேட்டால் தர வேண்டாம் என்று அவரே தெளிவாக அவரது ஒரிஜினல் முகநூல் கணக்கிலிருந்து விளக்கமளித்து விட்டார்.

இப்போது இதுதான் புதிய சதுரங்க வேட்டை போல் உள்ளது.

சரி முக நூல் நிர்வாகம் என்ன செய்கிறது?

மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிலும் அவை போலிக் கணக்கு என்று ரிப்போர்ட் செய்தேன். 


அவர்கள் கம்யூனிட்டி ஸ்டாண்டர்ட் படி அது சரியான அக்கவுண்ட்தான். வேண்டுமானால் நீ ப்ளாக் செய்து கொள் என்று சொல்லி விட்டது முகநூல். என்னை எப்படி அனாமதேயம் என்று சொன்னது என்பதும் புரியவில்லை

ஆகவே போலிக் கணக்குகள் அதிகமாக உலா வருகிறது. எச்சரிக்கையாக இருப்பீர்.

என்னிடமிருந்து ஏதாவது புதிய முக நூல் கணக்கின் பெயரால் நட்பழைப்பு வந்தால் ஏற்க வேண்டாம்.

பொதுவாகவே நான் யாரிடமும் எனக்காக பணம் கேட்க மாட்டேன். நான் சார்ந்த இயக்கத்திற்காக கேட்டால் கூட நேரடியாக கேட்பேனே தவிர, நிச்சயமாக இன் பாக்ஸ் மூலமாக கேட்க மாட்டேன். அப்படி கேட்டால் அது போலி என்று உணர்க. பணம் எதுவும் அனுப்ப வேண்டாம். 

No comments:

Post a Comment