Thursday, January 28, 2021

ஆஜான் குண்டர் படை தளபதியின் அறம் . . ..



ஆஜான் குண்டர் படையின் தளபதி லச்சூ மணிவண்ணனின் முகத்திரையை மதுரை பத்திரிக்கையாளர் தோழர் ப.கவிதா குமார் கிழித்துள்ளார். "அறம், முறம்" பேசுபவர்களின் யோக்கியதை கிழிந்து தொங்குகிறது.

நன்றி தோழர் ப.கவிதா குமார்.


 போதைக் கவிஞனின் போதனை

__________________________________
மதுரை தமுக்க மைதானத்தில் புத்தகத் திருவிழாவில் கவிதை வாசிப்பு அரங்கில்தான் முதன் முதலாக அந்த கவிஞனைப் பார்த்தேன். புல் மப்பில் இருந்தார். கவிதை வாசிக்க வந்தவர்களைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து என்னென்னமோ செய்துகொண்டிருந்தார் அந்த நவீனக் கவிஞர்.

மேடையில் ஏறி, அவர் ரசித்த கவிதைகள் மற்றும் அவரது கவிதையை வாசிக்க வேண்டும். நிலைகொள்ள முடியாத நிலையில் இருந்தவர் கவிதைப் பேப்பரை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் வாசிக்காமல் மைக் முன் நின்று கொண்டிருந்தார்.

இதயக்கோவில் படத்தில் சரக்கு அடித்து விட்டு பாட்டு பாடாமல் சிரித்துக்கொண்டிருக்கும் பாகவதர் கவுண்டமணிதான் சட்டென மனதிற்குள் வந்தார்.

"கவிதையை வாசிங்க, கவிதையை வாசிங்க" என கூட்டம் அவரை சத்தம் போட்டது. (மொத்த கூட்டமே 20, 30 பேர்தான். அதில், அப்படி என்ன வாசிக்கிறார்கள் என பார்க்கப்போன நான் ஒரு ஆள். தோழர் விஜயபாஸ்கர் வந்திருந்தார் என நினைக்கிறேன்).

மைக் முன் நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்த அந்த லட்சுமிகரமான கவிஞர் மப்போடு கவிதைகளை வாசித்துவிட்டு இறங்காமல் அப்படியே சிலை போல நின்றார். அவரை இறக்கிவிடச் சென்றவரையும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

முதன் முதலில் கமல்ஹாசன் பட எபெக்ட்டில் ஒரு கவியரங்கத்தை என் வாழ்நாளில் அங்குதான் பார்த்தேன்! நானும் பல கவியரங்களில் கலந்துகொண்டுள்ளேன். ஆனால், இப்படி ஒரு முத்தக்கவியைக் கண்டதில்லை. இந்த கவியரங்கம் குறித்து பத்திரிகையிலும் எழுதினேன்.

இப்போது அதை ஏன் ஞாபகப்படுத்துகிறீர்கள் என நினைக்கிறீர்களா? அந்த முத்தக்கவிஞர், தனது முகநூல் பக்கத்தில் விவசாயப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பதிவுகளிட்டுள்ளார்.
இப்படி அவர் எழுதியுள்ளார்...

"இந்தியத் திருநாட்டின் குடியரசு தின சீர்குலைப்பு முயற்சியை கொண்டாடும் எவருடனும் தொடர்பு கொள்ளவோ, நட்பு கொள்ளவோ விரும்பவில்லை. அவர்கள் கீழ் ஜென்மங்கள் என்பதே என் நிலைபாடு. நட்பிலிருந்து யாராக இருந்தாலும் விலகி ஓடி விடுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை... "இந்திய எதிர்ப்பையும், அரச எதிர்ப்பையும் கலந்துதான் ஒருவன் விவசாயிகளை ஆதரிப்பான் எனில் அவன் பொய்யன். இந்த பொய்யர்கள் உண்மையான பிரச்சனைகளை கூட சீர்குலைக்கிறார்கள். தமிழ் முற்போக்காளர்களும் இந்த பண்புகளைக் கொண்ட அழிவு சக்திகளே. இல்லையெனில் குடியரசு தின சீர்குலைப்பைக் கொண்டாடுவார்களா?" என்றும் எழுதியுள்ளார்.

ஒரு கவிதை வாசிப்பரங்கத்தில் குடித்து விட்டு, பார்த்தவர்களையெல்லாம் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இந்த கவிஞன்தான் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுபவர்களை அழிவு சக்தி என்கிறான்.

ஜெயமோகன் போன்றோருக்கு சொம்படித்துப் பிழைக்கும் இந்த நபர், தமிழக முற்போக்காளர்களையும் அழிவு சக்திகள் என்று சலம்புகிறார். தங்கள் வாழ்வே அழிந்து போகிறது என போராடும் விவசாயிகளை அழிவு சக்தி என்று எழுதும் இந்த நபர், ஒரு மாவு பாக்கெட்டிற்காக ஜெயமோகன் சலம்பல் செய்த அன்று போதையில் மயங்கிக் கிடந்தாரா எனத் தெரியவில்லை.

புதிய வேளாண் கொள்கைகளை எதற்காக எதிர்க்கிறோம் என்று விவசாயிகளும், முற்போக்காளர்களும் பட்டியலிட்டுள்ளனர். விவாதம் நடத்த தயாராக உள்ளனர். இந்த குடிகார கவிஞன், இந்திய அரசை ஆதரிக்கட்டும். பாஜகவிற்கு ஆள் சேர்க்க தனது கவிஞர் குழாமிற்கு மிஸ்டு கால்கூட கொடுக்கட்டும். ஆனால், புதிய வேளாண் சட்டங்களை ஏன் ஆதரிக்கிறேன் என எழுதட்டும். அதை விட்டு விட்டு "இந்திய எதிர்ப்பு, அரச எதிர்ப்பு உங்களுக்கு இந்த இரண்டு அஜண்டாக்கள் தவிர்த்து வேறு எதுவும் மண்டையிலேயே இல்லை. வெறுப்பர் கூட்டமாகி விட்டீர்கள்" என்று சலம்பக்கூடாது.




குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றியவன் யார் என போதை கவிக்குத் தெரியுமா?...

பாஜக எம்பி சன்னி தியோலின் நண்பனான நடிகர் தீப் சித்துதான். பாஜகவை சேர்ந்தவன். நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோருடன் அவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க பாஜக செய்த ஏற்பாடுதான் இவர்கள் என்பதை அறியாத மண்டூகம், தமிழக முற்போக்காளர்கள் மீது அவதூறு சேற்றை வாரி இறைக்கிறது.

பாஜகவிற்கு ஆதரவாக மாலன் போன்ற பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இது போன்ற கவிகளும் எழுதும் புரட்டுகள் ஒருநாள் அம்பலமாகும். அதனால்தான் அன்றே சொல்லிவிட்டுப் போனான் மகாகவி...

“படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் அய்யோன்னு போவான்”

No comments:

Post a Comment