Saturday, January 9, 2021

அனுபவிச்சு பாடறாரய்யா!




ஆன்மீக அரசியல் குறித்த நேற்றைய பதிவிற்கு திருவிளையாடல் படத்தின் "பாட்டும் நானே, பாவமும் நானே' பாடலின் காட்சியை எடுக்க அப்பாடலை பார்த்தேன். அப்பாடலை முழுமையாக பார்த்தேன். 

பாடலுக்கு நடிகர் திலகம் வாயசைத்துள்ளார். ஆனால் அவரே அனுபவித்து பாடியது போல அல்லவா இருக்கிறது! 

இந்த பாடலில் மட்டுமா? மற்ற பாடல்களில் எப்படி?

உடனடியாக நினைவுக்கு வந்த வேறு சில பாடல்களை பார்த்தேன்.

ஒரு இசை விற்பன்னர் அனுபவித்து பாடினால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் அனைத்து பாடல்களிலும் நடிகர் திலகத்தின் நடிப்பு அமைந்துள்ளது, தொடையில் தாளம் போடுவது உட்பட.

நான் பெற்ற இன்பத்தை உங்களுக்கும் மகிழ்ச்சியோடு கடத்துகிறேன். பாடலோடு மட்டும் நிறுத்தாமல் தில்லானா மோகனாம்பாளின் "நகுமோமு" கீர்த்தனைக்கு வாசித்ததும் சேர்த்து. 


 








3 comments:

  1. Historical songs.wonderful performance.fantastic singers, beautiful direction everything elevates the value of the songs. Thank you for the posting.

    ReplyDelete
  2. நடிகர் திலகத்தின் சிறப்பே அவரின் அற்புதமான அங்க அசைவுகள் தானே!

    ReplyDelete