Thursday, January 7, 2021

அமெரிக்க கலவரம் இங்கேயும் நடக்கும்

  


மோடியின் ட்வீட்டை படித்த போது சிரிப்பு வந்தது. ஜனநாயகத்தை பாதுகாப்பது பற்றி பேச இவருக்கெல்லாம் விவஸ்தை இருக்கிறதா என்ற கேள்வி, என்னைப் போல ஏராளமாவர்களுக்கு வந்திருக்கும்.

 ட்ரம்பும் மோடியும் வேறல்ல.

 இருவருமே மனித குல விரோதிகள். இருவருக்குமே என்றுமே ஜனநாயகம் என்பது ஒரு கசக்கும் சொல்.  பாசிஸ குணாம்சம் கொண்டவர்கள். தங்களின் மோசமான சிந்தனையை செயல் படுத்திக் காட்டியவர்கள்.

 இதிலே மோடி ட்ரம்பை விட ரொம்பவே மோசம்.

 அனைத்து ஜனநாயக அமைப்புக்களையும் சிதைத்தவர் மோடி. சுயேட்சையாக செயல்பட வேண்டிய நீதி மன்றம், சி.பி.ஐ, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து அமைப்புக்களும் இன்று மோடியின் அடிமைகளாகி விட்டது.

 தேர்தல் என்பது வெறும் கேலிக்கூத்துதான். வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்குவது என்பது மோடியின் ஞான மரபு.

 ராணுவத் தலைமை என்பதும் முப்படைத் தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்கியதால் மோடியின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது.

 இன்று ட்ரம்ப் ஆட்கள் செய்யும் அயோக்கியத்தனத்தை மோடி வகையறாக்கள் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

 அயோத்தியில் மசூதியை இடித்தது ,

குஜராத் கலவரம்,

முசாபர் நகர் கலவரம்,

டெல்லி வன்முறை,

மாட்டுக் கொலைகள்

 என்று காவிக்குண்டர்களின் கலவரப் பட்டியல் நீண்டது,

 எனவே நாளை மோடி ஆட்சியிலிருந்து வீழ்த்தப்பட்டாலும் காவிக் கயவர்கள் இன்று அமெரிக்காவில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்துவதை விட மோசமான கலவரத்தை நடத்துவார்கள்.  இந்த கலவரத்தில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை எடுத்துப் போனவன் கூட அமெரிக்க வாழ் காவிக் கயவனாகத்தான் இருப்பான்.

 எனவே மோடியின் முதலைக் கண்ணீரை உண்மையென நம்பி உங்களை மூடர் கூடத்தில் இணைத்துக் கொள்ளாதீர்கள்.

 

No comments:

Post a Comment