Saturday, January 30, 2021

கோட்ஸேக்களை கண்டு கொள்வோம்

 


அன்றொரு காலத்தில்

அண்ணல் மீது
தோட்டாக்களை ஏவியவன்
இறந்து போய்விடவில்லை.

 தூக்கில் தொங்கியவன்
இன்னும் உயிரோடுதான் உலாவுகிறான்,
முன்னை விட மூர்க்கமாக.
 
இப்போது துப்பாக்கி மட்டும்
அவன் ஆயுதமில்லை.
 
நாகத்தை விட விஷம்
அதிகம் கக்கும்
மத வெறிப் பேச்சில்
இருக்கிறான் கோட்சே.
 
உண்மைகளை திரிக்கின்ற
விலை போன ஊடகங்கள்
வடிவில் உலவுகிறான் கோட்சே.
 
உரிமையைக் கேட்கும் உழைப்பாளியை
தாக்கும் சட்டத்தில் சிரிக்கிறான் கோட்சே.
 
பெரும் பணம் படைத்தவருக்கு
தரகு வேலை செய்யும் சேவகனாய்
இளிக்கிறான் கோட்சே.
 
போலி தேச பக்தி முலாம் பேசி
மாற்றுக்  கருத்து கொண்டோரை
தேச விரோதி என்றழைக்கிறான் கோட்சே.
 
ஹிட்லரின் வாரிசுகளாய்
தொடரும் ஒவ்வொரு சங்கியாக
இப்போதும் தொடர்கிறான் கோட்சே.
 
அன்று கொன்றது ஒரு மகாத்மாவை.
எத்தனையோ ஆத்மாக்களை
நித்தம் நித்தம் கொல்கிறார்கள்
இன்றைய கோட்சேக்கள்.

 


No comments:

Post a Comment