Thursday, January 28, 2021

தீட்டலங்காரம் - ஆஜானுக்கு சவால்

 


வெளியே போன போது ஆனந்த விகடன் வாங்கி வந்தேன். தோழர் ஆதவன் தீட்சண்யாவின் "தீட்டலங்காரம்" கதை கண்ணில் பட்டது. சுடச் சுட படித்தேன். சுடச் சுட எழுதுகிறேன்.

தர்மபுரி நாயக்கன் கொட்டாயில் பாமக வெறியர்கள் நடத்திய கலவரம் மற்றும் கொள்ளையின் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை. 

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் உருமாற்றம் ஆனாலும் அதற்கு உயிர் இருந்து அணிந்துள்ளவரோடு பேசினால் என்ன ஆகும் என்ற கற்பனைதான் கதை. மனசாட்சியுள்ள பெண்ணின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று அறிய கதையை படியுங்கள்.

புளிச்ச மாவு ஆஜானே, அறம் என்றால் இதுதான். உம்மால் முச்சந்தி பேச்சாளர் என்று அவதூறு சொல்லப்பட்டவர் போல உம்மால் ஒரு கதையாவது நேர்மையின் பக்கம் நின்று எழுத முடியுமா? சவாலாகவே கேட்கிறேன்.

அற்புதமான சிறுகதை ஒன்றை அளித்த தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பிகு: மனசாட்சியுள்ள பனிரெண்டாம் வகுப்பு மாணவியின் பெயர் "திவ்யா" 

பிகு: ஆஜான் குண்டர் படை தளபதி பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் படித்தேன். அது மாலையில்

No comments:

Post a Comment