Monday, January 18, 2021

வேள்பாரியின் தாக்குதலுக்கு வெற்றி

 


ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஒரு கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. எது தேவையோ அவை அலட்சியப்படுத்தப்பட்டு எது தேவையில்லையோ அதற்கு பணம் விரயமாகிக் கொண்டிருக்கிறது.

காண்ட்ராக்டர்களும் அதிகாரிகளும் இணைந்து கொண்டு கூட்டுக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இச்சூழலில் மதுரையில் ஸ்மார்ட் சிட்டிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் தொடர்ந்து வலியுறுத்த அந்த ஆலோசனையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டு வந்தது.

அதனால் ஸ்மார்ட் சிட்டி அமைப்பின் துணைத்தலைவர் என்ற முறையில் ஆலோசனைக் கூட்டத்திற்கான அழைப்பை தோழர் சு.வெ அனுப்புகிறார்.


அதுவரை கள்ள மவுனம் சாதித்த அதிகாரிகள் இனியும் கூட்டத்தை கூட்டாவிட்டால் அசிங்கப்பட்டு விடுவோம் என்பதை உணர்ந்து கூட்டத்தை முறைப்படி நாளை நடத்த உள்ளார்கள்.



வேள்பாரியின் தாக்குதலுக்குக் கிடைத்த இன்னொரு வெற்றி இது.

வாழ்த்துக்கள் தோழர் சு.வெ

No comments:

Post a Comment