Tuesday, March 24, 2020

அர்த்தமற்ற கொண்டாட்டம், கோயம்பேடு பதற்றம்

கீழே உள்ள படங்கள் நேற்றைய முன் தினம் கொரோனாவை முறியடித்த வெற்றியை சங்கிகள் கொண்டாடி மகிழ்ந்த தருணத்தின் சில துளிகள். மக்கள் ஊரடங்கு என்பதை மோடி வகையறாக்களே அர்த்தமற்றதாக மாற்றினார்கள்.






சங்கிகள் தாங்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றார்கள். இந்த மூடர் கூட பட்டியலில் முதலிடம் முன்னாள் காக்கிச்சட்டை கிரண் பேடி அவர்களுக்கே (சூரியன் ஒலி- ஓம் -  நாசா- டுபாக்கூர் ! நினைவுக்கு வருகிறது) முதலிடம்.

வெற்று விளம்பரம் என்பதைத் தாண்டி இந்த கொண்டாட்டங்களில் ஏதாவது உள்ளதா?

அந்த கொண்டாட்டங்கள் மூலம் எவ்வளவு பேருக்கு புதிதாக பரவியுதோ?

இந்த லட்சணத்தில் இதை ஒரு சாதனையாக வேறு சொல்கிறார்கள்.



கீழேயுள்ள படம் நேற்றைய கோயம்பேடு காட்சி. இது கவலையைத் தருகிறது. 



இன்று மாலை ஆறு மணி முதல் 144 தடை உத்தரவு, மாவட்ட எல்லைகள் மூடல், அனைத்து போக்குவரத்து ரத்து போன்ற அறிவிப்புக்கள் மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

எலியை பிடிக்க வேண்டுமானால் அது செல்லும் வழியை அடைக்க வேண்டும் என்று மூமூமூமூத்த பத்திரிக்கையாளர் மாலன் ஆணவமாக சொல்கிறார்.

பாதுகாப்பு ஏற்பாடு என்ற பெயரில் ஒரு அரசு பதற்றத்தை உருவாக்கலாமா?


No comments:

Post a Comment