Tuesday, February 26, 2019

ஒரு தேசியவாதி என்பவர் ??????




எட்டு வயது பெண் குழந்தையை கோயில் வளாகத்தில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன் புணர்ச்சி செய்து முதுகெலும்பை உடைத்து கொலை செய்த உத்தமர்களை விடுதலை செய் என்று ஊர்வலம் போகும் போது கூட கையில் தேசியக் கொடியை ஏந்திச் செல்பவர்கள்.

ஒரு சாதாரண பாலியல் வன் புணர்ச்சி வழக்கை பெரிது படுத்தினால் சுற்றுலா மூலம் வரும் வருமானம் குறைந்து போகும் என்று கவலைப் படுபவர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விடாமல் கலவரம் செய்து, குற்றச் செயல் புரிந்த உத்தமர்களுக்காக வாதாடி, அரசு வழக்கறிஞர் பதவி பெறுபவர்.

ஆசிபாவுக்கு நிகழ்ந்த கொடுமையைப் பற்றி நீங்கள் பேசினால் மோடியை ஆதரிக்க வேண்டும் என்ற என் உணர்வுதான் பெருகும் என்று உத்தமர்களால் வாழ்விழந்த அந்த சின்னஞ்சிறு பெண் மீது இரக்கத்தைப் பொழிந்தவர்.

இவர்கள்தான் தேசியவாதிகள், தேச பக்தர்கள்.

இப்படியெல்லாம் செயல்பட்டு “தேசியவாதி” “தேச பக்தர்” என்ற முத்திரையை போலிகளிடமிருந்து  பெறுவதைக் காட்டிலும்

மக்களின் துயரங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமானவர்கள் யாரோ, அவர்களுக்கு எதிராக போராடி “தேசத் துரோகி” பட்டம் பெறுவதே  மேலானது. சிறந்தது.

1 comment:

  1. மிகவும் சரியான பார்வை. தங்களை தேச பக்தர்கள் என்று பீற்றிக் கொள்ளும் பக்தாள்களுக்கு சவுக்கடி

    ReplyDelete