Saturday, February 23, 2019

இந்தாண்டு இல்லை. இனி வரும் . . .




ஐந்தாம் வகுப்பிற்கும் எட்டாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என்பது மிகப் பெரிய அராஜகம்.

குழந்தைகளின் கல்விக் கனவை மொட்டாய் இருக்கையிலேயே கருக வைக்கும் கொடூரம்.

நாடெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வியை ஐந்தாவது வகுப்பிலும் எட்டாவது வகுப்பிலும் முடக்குகிற முயற்சி.

ஏழைக்குழந்தைகள், அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு.

குலத் தொழிலை பார்த்தால் போதும் என்ற நிலைக்கு மாணவர்களும் பெற்றோர்களும் தள்ளப்படுவார்கள்.

கல்வி உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் முரணான இந்த முடிவு கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.

இந்த வருடம் அமலாகாது என்று ஜெயக்குமார் சொல்லியுள்ளார்.

அதன் பொருள் என்ன?

அடுத்த வருடம் இருக்கும் என்பதா?

அய்யா அடிமைகளே, மோடி மனம் குளிர வேண்டும் என்பதற்காக தமிழகக் குழந்தைகளை காவு கொடுக்காதீர் . . .

No comments:

Post a Comment