Saturday, February 16, 2019

மோடிக்கு போட்டோதான் முக்கியம் !!!




இன்னுமா மோடிய நம்பறீங்க?

இந்தியா பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் மோடி பிரதமராக வேண்டும் என்று “தாக்குதல் நடந்த இவ்வேளையிலும் மோடிதான் பிரதமர்” என்பதை மறந்த தமிழிசை அம்மையார்,

“உயிரிழப்பதற்காகவே ராணுவத்தில் சேர்கிறார்கள், அரசு எப்படி பொறுப்பாகும்” என்ற தத்துவ முத்தை உதிர்த்த ஸ்மிர்தி அம்மையார்

ஆகியோருடைய அபத்தங்களை விட்டுத் தள்ளுங்கள்.

இந்த மரணங்கள் இந்திய மக்களின் மனதில் உருவாக்கியுள்ள வேதனை ஆளும் கட்சி ஆட்கள் மனதில் உள்ளதா?

புதிய ரயில் விடு திருவிழாவில் மோடி உற்சாகமாக கலந்து கொண்டார்.

அமித் ஷா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திட்டமிட்ட படி கலந்து கொண்டார்.

பியூஷ் கோயல் சென்னை வந்து எடுபிடி வகையறாக்களோடு தொகுதி பங்கீடுக் கூட்டத்தை ரகசியமாக நடத்தி விட்டுப் போயிருக்கிறார்.

ஆக, பாஜக தலைவர்களை இந்த கொடிய சம்பவம் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. “யார் வீட்டில் நடந்த எழவோ”  என்று மகிழ்ச்சி ததும்பும் முகத்தோடுதான் மோடியை ரயில் விடு விழாவில் பார்க்க முடிந்துள்ளது.

பாவம், மூளைச் சலவை செய்யப்பட்ட அப்பாவிகள்தான் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள், அந்த துயரத்திற்குக் காரணம் அவர்கள் நம்பும் கட்சியும் அதன் தலைவர்களும்தான் என்பதை இன்னும் உணராமல் !!!

2 comments:

  1. உள்ளது உள்ளபடியே சொல்லி இருக்கிறீர்கள்..

    ReplyDelete
  2. மோடி மொவத்துல என்ன சிரிப்பு என்ன சிரிப்பு

    ReplyDelete