Monday, February 18, 2019

நல்ல தீர்ப்புக்கு நன்றி – நாளையும் !!!




வேதாந்தா நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்ட பசுமைத் தீர்ப்பாணைய ஆணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

அதன் மூலம் ஸ்டெரிலைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எடுத்த முடிவு நீடிக்கிறது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடத்தலாம் என்று தீர்ப்பு சொல்கிறது. அனைத்து தரப்புக்களும் அங்கே தங்கள் பக்க நியாயங்களை முன் வைக்கலாம் என்று சொல்லியிருப்பது கொஞ்சம் நம்பிக்கையை அளிக்கிறது.

தமிழக அரசு கூட்டணி கணக்குகளுக்காக அடக்கி வாசித்தால் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தும்.

போராட்டத்தில் ஈடுபட்ட இதர சக்திகளும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். 

எனவே நாளையும் நமக்கானதாகவே இருக்கும் என்று நம்புவோம்.

தங்கள் இன்னுயிரை அளித்து நச்சு ஆலை ஸ்டெரிலைட்டை மூடக் காரணமான பதினான்கு  உயிர்களுக்கு வீர வணக்கம்.

3 comments:

  1. சத்யமேவ ஜெயஹே!
    இந்த வெற்றி தொடரட்டும்

    ReplyDelete
  2. கேரளாவில் இன்று பெரும் ஹர்த்தால்
    ஆனால் இதெல்லாம் உங்களுக்கு தெரிச்சிருக்காதே

    ஹர்த்தாளுக்கு காரணமாவது தெரியுமா ?

    இவ்வளவு கேவலமான காட்டுமிராண்டிகள்

    https://www.ndtv.com/kerala-news/2-youth-congress-workers-hacked-to-death-in-keralas-kasaragod-1995016

    R.Rajendra

    ReplyDelete
  3. CPM district secretary MV Balakrishnan denied the Congress's allegations. "We strongly condemn this murder. We are against murderous politics. We don't have any role in this," he told reporters.

    திருவாளர் ராஜேந்திரா,

    இது உங்க கண்ணில படலையா? உங்களுக்கு என்ன மஞ்சள் காமாலையா?

    ஆமாம் நீங்க யாரு?
    அன்னிக்கு நேருவை அசிங்கமா பேசினீங்க? இன்னிக்கு காங்கிரஸ்னு உருகறீங்க?
    சரி, பதிவுக்கு சம்பந்தமா பின்னூட்டம் எழுதவே தெரியாதா?
    உங்களுக்கு ஏதாவது எழுதனும்னா இங்கதான் வருவீங்களா?

    ReplyDelete