Monday, February 4, 2019

மோசடி அழைப்பு - உஷார், உஷார்


6206398218 லிருந்து போன் வந்தால் ???

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வரும் செய்திதான்.

எனக்கும் இந்த அழைப்பு வந்ததால் அந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

6206398218 என்ற எண்ணிலிருந்து காலை 9.15 மணிக்கு அழைப்பு வந்தது.

இஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பிராஞ்ச் மேனேஜர் பாலமுருகன் பேசறேன் என்று அந்த நபர் கூறினான்.

“ஏ.டி.எம் கார்டெல்லாம் இன்னியோட லேப்ஸ் ஆகுது. உங்க நம்பர் சொன்னா ரினியுவல் செஞ்சிடலாம். உடனே நம்பரை சொல்லுங்க”

“எனக்கும் ஸ்டேட் பேங்குக்கும் சம்பந்தமே கிடையாதே, நீ எதுக்கு எனக்கு போன் செய்யறே”

என்று ஒருமையில்தான் நான் கேட்டேன்.

ஹோட்டலில் சர்வர் “இட்லி, தோசை, பொங்கல், பூரி” என்று அடுக்குவதைப் போல

“இந்தியன் பேங்க், கனரா பேங்க், கரூர் வைஸ்யா பேங்க், யூனியன் பேங்க் எல்லாத்துக்கும் நாந்தான் இன்சார்ஜ். இன்னிக்குள்ள ரெனியூ செய்யலன்னா, ஏ.டி.எம் கார்டை யூஸ் செய்ய முடியாது. உங்க பணம்லாம் பேங்க் ஃப்ரீஸ் செஞ்சுரும்”

என்றதும்

“டேய், ஃப்ராடு, நானே ஒரு பேங்க் மேனஜர், என்னையே ஏமாத்தப் பார்க்கறீயா”

என்று சத்தம் போட்டவுடன் போனை வைத்து விட்டான்.

அந்த எண்ணை சேமித்து வைத்துக் கொண்டு பார்த்தால் அந்த எண்ணிற்கு வாட்ஸப் கணக்கெல்லாம் இருப்பது தெரிந்தது.

“True Caller” மூலம் சோதித்துப் பார்த்தால் அந்த எண்ணின் பெயர் Altad Andi  என்று அதைக் காண்பித்தது.

வேறு ஒரு எண்ணிலிருந்து கூப்பிட்டு

“பேங்க் மேனேஜர்” னு போன் செஞ்சு ஃப்ராடு செய்யறியாமே. உன் மேல கம்ப்ளைன்ட் வந்திருக்கு”

என்று ஆரம்பித்த உடனேயே போனை துண்டித்து விட்டான்.

வடிவேலு படத்தில் கிட்னி திருடுவது போல, இதே வேலையாகவே ஒரு கும்பல் அலைகிறது போல.

ஆகவே எச்சரிக்கையாக இருப்பீர்.

வங்கிகளும் சரி, எல்.ஐ.சி யும் சரி எப்போதும் தொலைபேசி செய்து ஏ.டி.எம் எண் அல்லது பாஸ்வோர்ட், பின் எண்ணைக் கேட்பதே கிடையாது.

அப்படி கேட்பவர்கள் மோசடிப் பேர்வழிகள். அப்படிக் கேட்பவர்களை நன்றாக திட்டி விடுங்கள்.


1 comment:

  1. இப்படி பலரும் எச்சரிக்கை செய்தாலும் ஏமாந்து போறவங்க இருக்கத்தான் இருக்காங்க

    ReplyDelete