Monday, November 26, 2018

யாருய்யா அந்த மந்திரி ?????


நேற்று அயோத்தியில் வெறி பிடித்தவர்கள் நடத்திய அதர்ம சபையில் தேர்தலின் போது மட்டுமே கிளப்பப்படும் ராமர் கோயில் பிரச்சினை மீண்டும் உசுப்பி விடப்பட்டுள்ளது.

எத்தனை யுகங்கள் கடந்தாலும் அயோத்தியில் காவிகள் ராமருக்கு கோயில் கட்டப் போவது கிடையாது. அந்த பிரச்சினையை அப்படியே வைத்திருந்து தேர்தல் ஆதாயம் தேடுவது மட்டுமே அவர்கள் நோக்கம்.

ராமர் கோயில் என்ற ஆயுதம் கொண்டு அவர்களின் ஆட்சி முனை மழுங்கிய அம்பாகி விட்டதை மறைக்க முயல்கிறார்கள்.

வெறியர்கள் கூட்டத்தை திரட்டி விட்டு வெறுங்கையோடு அனுப்பக் கூடாது என்பதற்காக அந்த கூட்டத்தில் பேசிய சித்ரகூட மடாதிபதியும் பத்மவிபூஷன் விருது பெற்றவருமான ஜகத்குரு (ஆளுக்காளு உலக குருன்னு உங்களுக்கு நீங்களே பட்டம் கொடுத்துக்கிட்டா எப்படி? எத்தனை ஜகத்குருக்களை உலகம் தாங்கும்?) சுவாமி ராம்பத்ராச்சார்யா என்பவர் பேசியுள்ளது கவனத்துக்குரியது.

"மோடி அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் எனக்கு சில உறுதிமொழிகளை கொடுத்துள்ளார். ஐந்து மாநிலத் தேர்தல் காரணமாக டிசம்பர் 11 வரை தேர்தல் நடத்தை விதி உள்ளது. அதன் பின்பு நாங்கள் மிக முக்கிய முடிவொன்றை எடுக்க உள்ளோம். அந்த முடிவின் படி ராமர் கோயில் கட்டுவதை யாராலும் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு அழுத்தமான முடிவு. அது ஒரு அவசரச்சட்டமாகவும் இருக்கலாம். மோடி இந்துக்களை ஏமாற்ற மாட்டார்"

இதெல்லாம் நடக்குமா, நடக்காது என்பது வேறு விஷயம். 

அரசு எடுக்கப்போகும் முடிவு பற்றி ராம்பத்ராச்சாரியா சாமியாரிடம் சொன்ன அந்த முக்கிய மந்திரி யார்?

ரகசியக் காப்பு பிரமாணத்தை மீறிய அந்த மந்திரியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்.


2 comments:

  1. Raam mandhir vahaam banaayenge

    ReplyDelete
    Replies
    1. புரியற மாதிரி சொல்லுய்யா

      Delete