Friday, November 16, 2018

மண்டியிட்டு மன்னிப்பு கேள் எச்.ராசா


மன நோயாளி போன்ற தோற்றத்துடன் அவ்வப்போது வக்கிரத்தை வாந்தி எடுக்கிற எச்.ராசா நேற்று பேசியது அது. எம்.பிக்கள் எண்ணிக்கை  குறித்து மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் கவலை கொண்டது அல்ல. மார்க்சிஸ்ட் கட்சியை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு ராஜா பயன்படுத்தியுள்ள வார்த்தையும் கூட எங்களை காயப்படுத்தாது. மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகள் குறித்து அக்கறையோடு செயல்படுகிற கட்சி மார்க்சிஸ்ட் கட்சி.

மூன்றாம் பாலினம் என்று இந்திய அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ள திருநங்கைகளை எந்த காலத்திலோ அவர்களை நையாண்டி செய்ய பயன்படுத்திய வார்த்தையை இப்போது பயன்படுத்தியுள்ளது கேவலமான செயல்.

மூன்றாம் பாலினத்தவர்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வருகின்றனர். அதுவும் அங்கங்கே ஒரு சிலர்தான்.

அதே நேரம் அவர்கள் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, அவர்களும் இயல்பான மனிதர்களே என்ற புரிதலும் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வருகிற நேரமும் இதுதான்.

இச்சூழலில் அவர்களை இழிவு படுத்துவது வெட்கக் கேடான, அசிங்கமான செயல்.

காவிகளிடமிருந்து நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாதுதான். அவர்களின் பாரம்பரியமே இப்படித்தான்.

எதையாவது பேசுவது, பிறகு மன்னிப்பு கேட்பது என்று இம்முறையும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது.

மக்கள் முன்பாக பகிரங்கமாக, மண்டியிட்டு அவன் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பொது வெளியில் அசிங்கப்பட்டால்தான் அவன் உளறுவது நிற்கும். 

2 comments:

  1. hats off H.Raja for calling spade a spade. Continue unmasking china agents and exposing venomous devils.

    ReplyDelete
    Replies
    1. பொறுக்கியை பொறுக்கியே காமுறுவர்

      Delete