Thursday, November 29, 2018

அம்பானியின் பெருந்தன்மைக்கு நன்றி சொல்வீர் . . .




வாட்ஸப்பில் வந்த தகவல் கீழே உள்ளது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் 

பிற்பகல் சரியாக 1 மணிக்கு நடை சாத்தப்படும்.

 ஆண்டாண்டு காலமாக இந்த நடைமுறை அங்கே பின்பற்றப்பட்டு வருகிறது

எந்த சந்தர்ப்பத்திலும், யாருக்காகவும் இது மீறப்பட்டதில்லை என்கிறார்கள் உள்ளுர் மக்கள்.

மோடியின் முதலாளி முகேஷ் அம்பானி நேற்று அங்கே செல்வதாகத் திட்டம். 1 மணி வரையில் ஆளைக் காணோம்

ஆனால் நடை சாத்தப்படவில்லை. ஆற அமர ஒன்றரை மணி வாக்கில் வந்த அம்பானி & கோ-வுக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது

சிறப்பு பூஜை இத்யாதிகளெல்லாம் பேஷாக செய்யப்பட்டன

அள்ளியிறைத்தஅம்பானியை அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் வழியனுப்பிவைத்தபோது மணி 2;15. 

அதன் பிறகே நடை சாத்தப்பட்டது.

அப்பட்டமான இந்த அத்துமீறல் உள்ளுர் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகஇந்து தமிழ்செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளுர் பக்தர்கள் சரி..,

ஆகம விதிகள், ஆச்சார அனுஷ்டானங்கள் மீறப்பட்டால் சும்மா விடமாட்டோம் 

என பொழுதுக்கும் கம்பு சுற்றும் ராமகோபாலன்கள், எச்.ராஜாக்கள் எங்கே போனார்கள்? ஒரு சத்தத்தையும் காணோம்.

அனுப்பியவருக்கு  ஆனாலும்  ஓவர் எதிர்பார்ப்பு.

ஆகம விதிகள், கோயில் சம்பிரதாயங்கள் ஆகியவை மீறப்பட்டதை எச்.ராசா, ராம. கோபாலன் வகையறாக்கள் கண்டிப்பார்களா என்ற கேள்வி உங்களுக்கே நியாயமா இருக்கா?

நீங்களே சொல்லிட்டீங்க, முகேஷ் அம்பானி மோடியோட முதலாளின்னு.

பாஜகவிற்கும்  காவிகளுக்கும் படியளிக்கிற பகவான் அம்பானி. அவருக்காக ஆலய சம்பிரதாயங்களை மாற்றவில்லை என்றால் வேறு யாருக்காக மாற்றுவது!

கடல் மண்ணை பிடித்து சீதையால் உருவாக்கப்பட்டது  ராமேஸ்வரம் கோயில் உள்ள ராமநாதர் மூலவர் லிங்கம் என்று புராணத்தில் சொல்லப்படுவதாக படித்துள்ளேன்.

அந்த லிங்கத்தை பெயர்த்து எடுத்து அம்பானி தங்கிய விடுதிக்கு கொண்டு போய் வழிபட வைக்கவில்லை என்பதற்காக நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். அப்படியெல்லாம் சொல்லாத முகேஷ் அம்பானியின் பெருந்தன்மைக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

பிகு

எதுக்கும்  கோயிலில் உள்ள உற்சவர் சிலைகள் எல்லாம் பத்திரமா இருக்கான்னு ஒரு தடவை பொன்.மாணிக்கவேல் பார்த்துட்டா நல்லது.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete