Friday, November 2, 2018

சங்கிகளா! இதெல்லாம் நக்கல் !



படேல் சிலை தொடர்பாக மோடியை வைத்து செய்த இரண்டு பதிவுகளைப் படித்து மனம் விட்டு சிரித்தேன். அவற்றை இங்கே பகிர்ந்தும் கொண்டுள்ளேன்.

இதனை பகிர்ந்து கொள்வதில் எனக்கு ஒரே இரு கவலை மட்டும் உள்ளது.

இதையெல்லாம் சங்கிங்கள் நிஜமென்றே நினைத்துக் கொண்டு காலரை தூக்கி விட்டுக் கொண்டு திரிவார்களே என்பதுதான். பிறவி மூடர்கள் நாம் சொல்லி திருந்தவா போகிறார்கள்? அவர்களை திருத்துவது நம்முடைய வேலையும் கிடையாதே! 





3000 கோடி செலவுல சிலைய வைக்க மோடி என்ன லூசாடா?
நர்மதா ஆற்றங்கரைக்கு மேல போவுற எந்த சாட்லைட்டும் வேலை செய்யலங்குற ரகசியம் நம்ம நாட்டு சயின்டிஸ்ட் மூலமா அறிஞ்ச மோடி, அங்க ஒரு சிலை வச்சி சிலைக்குள்ள நம்ம ஆயுதங்களை ஒளிச்சி வச்சிருக்காரு. 

எதுக்கு அவ்ளோ பெரிய சிலைன்னு நீங்க கேக்கலாம் உங்களுக்கு தெரியுமா அந்த அது ஒன்னும் சாதா சிலை மட்டும் இல்ல அந்த சிலை ஒரு தானியங்கி சிலை லைக் டெர்மினேட்டர் மாதி. உலக போர் வந்தா அது பாட்டுக்கு போயி குண்டு போடும் நாம வீட்டுக்குள்ள சேப்டியா உக்காந்து மான்ங்கி பாத் கேக்கலாம். 

ஒருவேளை ஸ்ரீலங்காகாரன் இனி நம்ம மீனவனை கைது பண்ண வந்தா ஆட்டோமேடிக்கா அந்த சிலை அங்க இருந்து குறி பாத்து சுடும்... இங்க இருந்தே அமெரிக்கால ட்ரம்ப் என்ன பண்ராருனு சிலை மேல ஏறி நின்னு நம்ம பாக்கலாம். பாகிஸ்தான் பிரதமர் என்ன சோப்பு போட்டு குளிக்கார்னு சிலை மூக்கு பக்கம் போனாலே வாசம் அடிக்கும். 

இந்த சிலையோட சிறப்பம்சம் என்னன்னா அது ஒரு கரைல நின்னு பாத்தா பட்டேல் மாதியும் ஒரு பக்கம் நின்னு பாத்தா தேவகவுடா மாதியும் தெரியும் எதுக்குன்னு நீங்க கேக்கலாம் இந்த சிலைய தாக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டி இருக்காங்க. அவங்க அத தாக்க ராக்கெட் ஏவுனா ராக்கெட்டுக்கும் தேச விரோதிகளும் தேவ கவுடா மாதி தெரியும்போது அதுங்க சிலையை தாக்காம திரும்பி போயிடும் வாட் எ டெக்கினாலஜி . 

எண்ணி ரெண்டே வருஷம் எல்லா மாநிலத்துலயும் சில வைக்கோம் வல்லரசு ஆவுரோம். இத எப்டியோ மோப்பம் புடிச்ச கிறிஸ்தவ மிஷினரி கைகூலிகளும் அரேபிய அடிமைகளும் காலைல இருந்து மோடிய திட்டுதுவ.... மோடி மக்களுக்கானவர் உரக்க சொல்லுவோம் பாரத் மாதாக்கி ஜே😜

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Hahahahahahahahahahahahahahahahahahaha..... mudiyale vayiru valikithu...

    ReplyDelete