Sunday, November 11, 2018

பொதுத்துறை நெய்யே! மோடி வைத்த சிலையே!




எண்
நிறுவனத்தின் பெயர்
ரூபாய் -கோடிகளில்
1
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
900
2
ஓ.என்.ஜி.சி
500
3
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
250
4
ஆயில் இந்தியா கார்ப்பரேஷன்
250
5
பவர் கிரிட்
125
6
குஜராத் கனிமவள வளர்ச்சிக் கழகம்
100
7
இஞ்சினியர்ஸ் இந்தியா
50
8
பெட்ரோனெட் இந்தியா
50
9
பால்மர் லாரீ
50

மொத்தம்
2,275


மேலே உள்ள பட்டியலில் உள்ள தொகை என்ன தெரியுமா?

உலகின் மிக உயர்ந்த சிலையை வைப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து மோடி பறித்த தொகை இது.

Corporate Social Responsibility என்ற பெயரில் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் வருவாயில் ஒரு தொகையை சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியொன்று உண்டு.

அப்படி சமூக நலத் திட்டங்களுக்காக செலவு செய்ய வேண்டிய தொகையை படேல் சிலைக்காக திருப்பி விட்டுள்ளார் மோடி. சிலை வைப்பதில் என்னய்யா சமூக நலம் உள்ளது?

சரி, இந்த சமூக நலப் பொறுப்பு என்பது மோடி தரகு வேலை பார்க்கும் அம்பானி, அதானி வகையறாக்களுக்கு எல்லாம் கிடையாதா?

அவர்களிடமிருந்து ஏன் மோடி ஒரு பைசா கூட வாங்கவில்லை?

லாபமென்றால் தனியாருக்கு, நஷ்டமென்றால் மக்களுக்கு . . .

இதுதான் உலகமயம் போதிக்கிற கோட்பாடு . . .

படேல் சிலை விவகாரத்தில் நடந்துள்ளதும் இதுதான் . . .

No comments:

Post a Comment