Saturday, May 19, 2018

அன்று கொடுத்த ரத்தம் . . .




எனது கொல்கத்தா பயணத்தில் நான் பார்க்க நினைத்த இன்னொரு இடம் வில்லியம்ஸ் கோட்டை. பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்டது.  ராணுவ முகாமாக அன்றிலிருந்து இன்று வரை செயல்பட்டு வருகிறது. உள்ளே செல்ல முடியாது என்றாலும் வெளியிலிருந்து பார்க்க விரும்பினேன்.

எங்கள் விருந்தினர் இல்லத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அங்கே அழைத்துச் செல்ல பார்த்தவ் கோஷ் என்ற தோழர் வருவார் என்று முதல் நாள் இரவு தகவல் சொன்னார்கள். அவரும் காலை தொலைபேசியில் அழைத்து உறுதி செய்தது மட்டுமல்லாமல் காலை உணவு சாப்பிட்டு விடாதீர்கள் என்றும் அழுத்தமாக வலியுறுத்தினார்.

நானும் அப்படியே காத்திருந்தேன். அனேகமாக ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வார் என்பது என் எதிர்பார்ப்பு. அவரும் வந்தார். டோஸ்ட் செய்யப்பட்ட ப்ரெட் சாண்ட்விட்ச், அவித்த முட்டை, ரசகுல்லா மற்றும் இன்னொரு பெங்காலி இனிப்பு, ஃப்ரூட் கேக், இவையெல்லாம் சாப்பிட வசதியாக ஒரு தட்டு, ஃப்ளாஸ்கில் தேநீர் என்று கொண்டு வந்து என்னை அன்புக்கடலில் திண்டாட வைத்து விட்டார்.

“எதற்கு இவ்வளவு சிரமம்?” என்று கேட்ட போது எங்கள் ஊருக்கு வந்த தோழருக்கு செய்வதற்கு என்ன சிரமம் என்று கேட்டது மட்டுமல்லாமல் ஒரு சம்பவத்தையும் நினைவு படுத்தினார். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு அவர் சகோதரி சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த போது ரத்தம் தேவைப்பட்டுள்ளது. அவரால் வேலூர் வர முடியாத நிலையில் சங்கத்தின் மூலமாக தொடர்பு கொண்டபோது நீங்களும் ரமேஷ்பாபு (எங்கள் இணைச்செயலாளர்)  என்ற தோழரும் ரத்தம் அளித்துள்ளீர்கள்.  இப்போதுதான் உங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று அவர் நெகிழ்ச்சியோடு கூற எனக்கு பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை.

வேலூர் திரும்பியதும் தோழர் ரமேஷ்பாபுவிடமும் வழக்கமாக ரத்த தானம் செய்யும் பல தோழர்களிடமும் இச்சம்பவம் பற்றி பகிர்ந்து கொண்டேன்.  எல்லோருக்குமே ஒரு சந்தோஷம். இப்பணியை தொடர்ந்து செய்ய எல்லோருக்குமே உற்சாகமளித்தது.

நாம் மறந்து போனாலும் அவர்கள் நினைவில் வைத்துள்ளனர் என்பது மனதிற்கு நிறைவளிக்கிறது.  கொல்கத்தா பயணத்தின் உன்னதமான தருணமாக இதைத்தான் கருதுகிறேன்.

                                                               - பயணம் தொடரும் . . .

பி.கு ; மேலே உள்ள படத்தில் எனக்கு வலது பக்கத்தில் நிற்பவர் தோழர் பார்த்தவ் கோஷ். இடது பக்கத்தில் இருப்பவர் கிழக்கு மண்டல பொருளாளர் தோழர் அமிதவ்

8 comments:

  1. ரத்தமல்ல...உயிர்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. உயிர் கொடுப்பான் தோழன்👏

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீ ஒரு கடைந்தெடுத்த பொறுக்கி என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறாய். எங்கே உன் முகத்தை காட்டு பார்க்கலாம். உன்னைப் போன்ற வக்கிரமான மன நோயாளிகளை உலகம் தெரிந்து கொண்டு உன்னை கல்லால் அடித்து துரத்த வேண்டும்.

      Delete