Tuesday, May 29, 2018

ஆயிரம் முறை பகிர்வோம். என் செய்வாய்?


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த ஆனந்த விகடனின் இந்த கருத்துப்படத்தை உணர்வுள்ள  லட்சக்கணக்கான தமிழர்கள்  பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நேற்று சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், நடத்திய கண்டன நிகழ்ச்சியின் மேடையில் இந்த படத்தை பின்னணியில் வைத்ததை காவல்துறை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளது. இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை  அனுமதி அளித்திருக்கிறது.

தூத்துக்குடியில் நடந்த கொடூரத்தின் உண்மையான பின்புலத்தை, கார்ப்பரேட்டுகளுக்கும் மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்குமான கூட்டுக் களவாணித்தனத்தை இந்த படம் அம்பலப்படுத்துவதால் அதை அகற்ற முயன்றுள்ளார்கள்.

இந்த படத்தை மீண்டும் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வோம்.

எங்கெங்கு வாய்ப்பு உள்ளதோ அங்கேயெல்லாம் பகிர்வோம்.

என்ன செய்யும் காவல்துறை?
காவல்துறையால் என்னதான் செய்ய முடியும்?


No comments:

Post a Comment