Saturday, May 12, 2018

த.செ வை பணியிடை நீக்கம் செய்யுங்கள் . . .


வாரங்கள் பல கடந்து கொண்டே இருக்கிறது.

முன் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

கோடை மழை வருமோ என்று அதிசயிக்கப்படக் கூடிய விதத்தில் உயர் நீதி மன்றம் குட்டு வைத்துக் கொண்டே இருக்கிறது.

ஆனாலும் காமெடி வில்லன் எஸ்.வி.சேகரை தமிழக காவல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை.

அதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும்.

அதிகார பலம், அதிகார ஆணவம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

திருமதி கிரிஜா வைத்யநாதன் தலைமைச் செயலாளராக இருக்கும் வரை கைது நடக்கப் போவதில்லை.

எனவே

ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் தரும் அம்மையாரை உடன் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

ஆனால் 

எடுபிடி அரசு அதனைச் செய்யாது என்பதே யதார்த்தம் . . .

இந்த லட்சணத்தில் மத்தியரசின் முதன்மைச் செயலாளராக அம்மையார் முயற்சிக்கிறாராம். 

அப்படி ஒரு கொடுமை நடந்தால்

இன்டர் போல் கூட சிப் சேகரை கைது செய்யாது.

தமிழக காவல்துறையின் வீரம் எல்லாம் போராடுகிற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதுதான் பாயும்.


No comments:

Post a Comment