Tuesday, May 1, 2018

யெச்சூரியிடம் சவால் விடுவீரா மோடி?



"கையில் குறிப்பு இல்லாமல் என்னைப் போல பதினைந்து நிமிடம் பேச முடியுமா"

என்று மோடி ராகுல் காந்திக்கு சவால் விட்டுள்ளார்.

அப்படி குறிப்பு இல்லாமல் அவர் பேசுவது எதுவும் உருப்படி இல்லாத உடான்ஸ் என்பதும் வாய்க்கு வந்ததை அடித்து விடுவதற்கு குறிப்பு எதுவும் தேவை இல்லாதது

என்பது 

ஒரு புறம் இருக்க

மோடிக்கு நான் விடும் சவால் ஒன்று.

ஏதாவது ஒரு பொருள் குறித்து

அது 

அரசியல்,
பொருளாதாரம்,
இலக்கியம்,
வரலாறு,
அறிவியல்,
சமூக நீதி,
அரசியல் சாசனம்

என்று எது வேண்டுமானாலும் இருக்கட்டும்.

அது குறித்து 

கையில் குறிப்பு வைத்துக் கொண்டே

எங்கள் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி உடன்
உங்களால் ஒரு பதினைந்து நிமிடமாவது விவாதம் நடத்த முடியுமா?

அதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?

பின் குறிப்பு :

இது ரொம்ப ஓவராக இருக்கிறது என்று எனக்கே தெரிகிறது. மோடியோடு அறிவுபூர்வமாக விவாதம் நடத்த தோழர் யெச்சூரி அவசியமில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர்களே விவாதத்தில் மோடியை மண்ணைக் கவ்வ வைத்து விடுவார்கள் என்பதே யதார்த்தம். 

3 comments:

  1. இதைக் கேள்விப்பட்டு மோடிக்கு வயிற்றுப்போக்கு வந்து விட்டதாம்

    ReplyDelete
    Replies
    1. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள அமெரிக்கா போகாமல் இருந்தால் சரி

      Delete
  2. மணிக்கணக்கில் பேச (வாய்க்கு வந்ததை எல்லாம் உளர)குறிப்பே தேவையில்லை. 10 நிமிடத்தில் பேச வேண்டியதை பேச சொன்னால் கண்டிப்பாக குறிப்புகள் தேவை,அத்துடன் அதிக முன் தயாரிப்பும்( notes preparations)தேவை.

    ReplyDelete