Tuesday, May 15, 2018

தமிழக போலீஸை விட கேவலமானவர்கள் . . .


மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மம்தாவின் குண்டர்கள் நடத்திய வெறியாட்டம் குறித்த தீக்கதிர் செய்தியினை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொடங்கிய அராஜகம், நேற்று உச்சகட்டத்தை அடைந்து பனிரெண்டு  உயிர்களை பலி வாங்கியுள்ளது.

இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் வழக்கம் போல கள்ள மௌனம் சாதிக்கிறது. கேரளாவில் காவி யாருடைய நகமாவது பிய்ந்து விழுந்தால் வன்முறை என்று அப்போது கூச்சல் போடலாம் என்று காத்திருக்கிறார்களோ என்னமோ?

மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பாஜக விற்கும் உடன்பாடு  என்ற மிகப் பெரிய பொய்யைப் பிடித்துக் கொண்டு தொங்கிய சமூக ஊடக புரட்சியாளர்கள், போராளிகள் கூட இப்போது வேறு பக்கம் புரட்சி செய்ய போய் விட்டார்களா என்று தெரியவில்லை.

இவ்வளவு கொலைகள் கண் முன்னே நடந்தும் கூட, அவையெல்லாம் சிறு சம்பவங்கள் (STRAY INCIDENTS) என்று மேற்கு வங்க மாநில காவல்துறை தலைவர் குறிப்பிடுகிறார். அதன் மூலம் தமிழக காவல்துறையை விட கேவலமானவர்கள் நாங்கள் என்பதை நிரூபித்து விட்டார்.

"அடித்தால் திருப்பி அடி" என்ற தோழர் சீனிவாசராவின் வழிகாட்டுதலை மேற்கு வங்க தோழர்கள் எப்பொது பின்பற்ற தொடங்குகிறார்களோ, அது வரை தாக்குதல்கள் நிற்கப் போவதில்லை என்பது யதார்த்தம்.

இன்று கள்ள மவுனம் சாதிக்கும் கையாலாகாத கூட்டம் தன் ஆழ்நிலை தியானத்தை அப்போதும் தொடர வேண்டும். 

தீக்கதிர் செய்தி கீழே 

மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் பயங்கரம்

சிபிஎம் ஊழியர் குடும்பமே எரித்துப் படுகொலை 
மாநிலம் முழுவதும் வெறியாட்டம்; 
12 பேர் படுகொலை


கொல்கத்தா, மே 14-எதிர்பார்த்தபடியே மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் குண்டர்கள் வரலாறு காணாத கொடூரவன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டனர். அதுதொடர்பான ஏராளமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. எனினும்தேசிய ஊடகங்கள், திரிணாமுல் குண்டர்கள் ஏவிய இந்த வன்முறை வெறியாட்டத்தை கட்சிகளுக்கு இடையிலான வெறும் மோதலாக வெளிப்படுத்தின.மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் திங்களன்று நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும், கிட்டத்தட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆயுதமேந்திய திரிணாமுல் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 

பல நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளை துப்பாக்கி முனையில் அவர்கள் கைப்பற்றினார்கள். வாக் காளர்களை வெறிகொண்டு தாக்கினார்கள். ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வெளியேற்றி னார்கள். பல கிராமங்களை ஆயுதமேந்திய திரிணாமுல் குண்டர்கள் முற்றுகையிட்டனர். கைப்பற்றிய வாக்குச்சாவடிகள் அனைத்தையும் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து வாக்குகளை பதிவு செய்தனர். எதிர்க்கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். எதிர்த்து நின்ற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு என பயங்கரங்களை அரங்கேற்றினர். ஏராளமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பெட்டிகளை கைப்பற்றிச் சென்றனர்.

திரிணாமுல் குண்டர்களின் வெறி யாட்டம், தாக்குதல்களில் திங்களன்று மாலை 5 மணி வரை கிடைத்த விபரங்களின்படி 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கைமேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.பஞ்சாயத்து தேர்தலையொட்டி எதிர்க்கட்சியினர் மீது, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்இடதுமுன்னணியினர் மீது ஞாயிறன்று நள்ளிரவு முதலே திரிணாமுல் குண்டர்கள் வன்முறையை துவக்கிவிட்டனர்.

தெற்கு 24 பர்கானா மாவட்டம் நம்கானா ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் தேபுதாசையும், அவரது மனைவி உஷாதாசையும் குறிவைத்து கொடூரமாக தாக்குதல் நடத்திய குண்டர்கள், அவர்களை வீட்டிற்குள் வைத்துப் பூட்டி வீட்டோடு தீ வைத்து எரித்து படுகொலை செய்தனர். தோழர் தேபுதாஸ், திரிணாமுல் வேட்பாளரை எதிர்த்து பஞ்சாயத்து தேர்தலில் பிரச்சாரம் செய்ததால் தேர்தல் நடப்பதற்குள் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஞாயிறன்று காலை திரிணாமுல் வேட்பாளர் மற்றும் அவரது சக குண்டர்களால் கடுமையாக மிரட்டப்பட்டிருந்தார். எனினும் அவர் துணிச்சலுடன்களத்தில் நின்றார். இந்தப் பின்னணியில் நள்ளிரவில் இருவரும் வீட்டோடு சேர்த்து எரித்து கொல்லப்பட்ட பயங்கரம் நடந்திருக்கிறது.

திங்களன்று காலை வாக்குப் பதிவு துவங்கிய நிலையில், வடக்கு24 பர்கானா மாவட்டம் அம்தங்காவில் சிபிஎம் ஊழியர் தைபூர் ரஹ்மான்கெயின் (28), திரிணாமுல் குண்டர் களால் குண்டுவீசி படுகொலை செய்யப்பட்டார். கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் நந்திகிராமில் சிபிஎம் ஊழியர் ஜோகேஸ்வர் கோஷ், அபுமன்னா ஆகியோர் திரிணாமுல் குண்டர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.சிபிஎம் ஊழியர்கள் மட்டுமின்றி சில இடங்களில் காங்கிரஸ், பாஜக ஊழியர்களும் கொல்லப்பட்டனர்.கிட்டத்தட்ட அனைத்து மாவட் டங்களிலும் நூற்றுக்கணக்கான சிபிஎம் ஊழியர்கள் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகினர். 

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ரத்தம் சிந்தப்பட்டது. பல இடங்களில் அனைத்து தரப்புமக்களும் ஒன்றுசேர்ந்து திரிணாமுல் குண்டர்களை பதிலடி கொடுத்து விரட்டியடித்த சம்பவங்களும் நடந்தன.திரிணாமுல் வன்முறை தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, ஒன்றிய தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் புகார்கள் அளித்துள்ளனர். 

கொல்கத்தாவில் திங்களன்று மாலை தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி சிபிஎம் தலைவர்கள் பிமன்பாசு, சூர்யகாந்த மிஸ்ரா தலைமையில் ஆவேசமிக்க கண்டனப் பேரணியும் நடைபெற்றது.

4 comments:

  1. ஐயோ பாவம்

    ReplyDelete
  2. Once upon a time commus do the same to TMC. Now TMC repaying. No worry do your duty and come back soon.

    ReplyDelete
  3. mamatha is returning the compliments to commies for 30+ years of violence perpetrated. For this reason alone people admire her.

    ReplyDelete
    Replies
    1. உங்க ஆளுங்க, பாஜக காரனுங்க கூட அங்க செத்துக்கிட்டு இருக்கான்னு தெரியுமாய்யா அதி மேதாவி? போய் அவங்க பிணத்தை அடக்கம் பண்ணிட்டு வந்து கமெண்ட் போடு

      Delete