Friday, January 8, 2016

படா பேஜாரா போச்சு சார்!




வழக்கமாக எங்கள் சாலையை சுத்தம் செய்யும் துப்புறவுத் தொழிலாளி அந்த தோழர். பல நாட்கள் அவரை பார்க்கவில்லை. இன்றுதான் கண்ணில் பட்டார்.

என்னங்க, கொஞ்ச நாளா காணோமே, எங்க மெட்ராஸ் போயிருந்தீங்களா என்று உரையாடலைத் தொடங்கினேன்.

ஆமாம் சார், ரொம்பவே அவஸ்தையாயிடுச்சு, பதினஞ்சு நாள் பெண்டு நிமித்திட்டாங்க. விடியக் காலயிலே எழுந்து துப்புறவு வேலைக்கு கூட்டிட்டு போயிடுவாங்க, ராத்திரில நிவாரணப் பொருளயெல்லாம் பேக் பண்ண வேற எடத்துக்கு கூட்டிட்டுப் போய்டுவாங்க. தூங்கக் கூட நேரமில்லை என்றார் அவர்.

தங்க வைச்ச இடமெல்லாம் எப்படி இருந்தது?

ஆட்டு மந்தை மாதிரி அடச்சு வைச்சுட்டாங்க. கொசுக்கடி வேற. ஒன்னு ரெண்டு நாள் குளிக்க தண்ணி கூட சரியா வரல.

சாப்பாட்டு வசதியெல்லாம்.

பக்கத்துல எங்க அம்மா ஓட்டல் இருக்கோ, அங்க போய் சாப்பிட்டுக்கோனு சொல்லிட்டாங்க. துட்டு எங்களதுதான்.

சரி, இவ்ளோ கஷ்டப்பட்டீங்களே. எவ்வளவு ரூபா கிடைச்சது?

அத கேக்காத சார், சொன்னா வெட்கக்கேடு. படா பேஜாராப் போச்சு சார்.

பார்த்துக் கொள்ளுங்கள், இதுதான் அம்மா ஆட்சியின் லட்சணம். உழைப்புச் சுரண்டலுக்கு இலக்கணம்.



4 comments:

  1. நல்ல பதிவு. துப்புரவுத்தொழிலாளிகளின் உண்மையான நிலையை உணர்த்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. எது எதற்கோ அரசு செலவழிக்கிறது. இவர்களுக்குக் கொடுத்தால் என்ன? அநியாயம்!

    ReplyDelete
  3. வெள்ளத்தால் பாதிக்கபட்ட மெட்ராஸை சுத்தம் செய்ய தமிழக அரசால் அழைத்து செல்லபட்ட தொழிலாளிகள் அரச பணிக்கு அழைத்து செல்லபட்ட தொழிலாளர்கள் ஆவார்கள். அவர்களையே ஆட்டு மந்தை மாதிரி அடச்சு வைத்து, தாங்க முடியாத வேலை வாங்கி, அற்ப சம்பளம் கொடுத்து தமிழக அரசு துன்புறுத்தியுள்ளது. இது அம்மாவின் புரட்சிகர கொள்கை.

    ReplyDelete