Thursday, January 28, 2016

இப்படியோர் குடியரசு தின கொண்டாட்டம்????





இரண்டு நாட்களாக சமூக வலைத் தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் படம் இது.

இந்தியக் குடியரசின் நிலை எவ்வளவு மோசமாகி விட்டது என்பது இந்தப் படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. இந்தியாவின் இறையாண்மை பன்னாட்டுக் கம்பெனிகளின் கைவசம்தான் உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.

அரசியல் சாசனத்தின் முகப்பில் உள்ள “இந்தியா ஒரு இறையாண்மை உள்ள, சோஷலிச, ஜனநாயக, மதச்சார்பற்ற, குடியரசு நாடு” என்பதை பன்னாட்டுக் கம்பெனிகளின் பானங்களை அடுக்கி வைத்து கிண்டல் செய்கின்றார்கள்.

அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டவற்றை அர்த்தமில்லாமல் செய்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டென்றால் அரசியல் சாசனத்தையே அகற்றும் திசை வழியில் மோடி அரசு செல்கிறது.

ஆனாலும் இவர்கள் எல்லாம் கொடியேற்றி, மிட்டாய் கொடுத்து குடியரசு தினத்தை கொண்டாடிக்கிறார்கள்.

கொடுமை சார் இது!

3 comments:

  1. கொடியேற்றும் உரிமை ; வெளிநாட்டினருக்கு ஆதர் கார்டு குடிக்கும் உரிமை .ஆட்சியாளர் செய்யும் ஊழல் மறக்க டாஸ் மாக் குடி உரிமை.

    ReplyDelete
  2. one supermarket salesman decorated these items. good imagination. nothing to bother.just fun.

    why you always find fault others....may be true communist...

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய? எனக்கு இந்த தேசம் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் பறி போவது பற்றி கவலை இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் எல்லோருக்கும் அந்த கவலை இருக்கிறது. உங்களைப் போல எல்லாவற்றையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியாது. கம்யூனிஸ்டுகள் நாங்கள் நாட்டைப் பற்றி கவலைப்படுகிறோம். சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் நீங்கள் கோக் குடித்து கொண்டாடுங்கள்

      Delete